கண்ணம்மாவை பாராட்டி தள்ளிய பாரதி – வெறுப்பில் வெந்து போன வெண்பா! சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
கண்ணம்மாவை பாராட்டி தள்ளிய பாரதி - வெறுப்பில் வெந்து போன வெண்பா! சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கண்ணம்மாவை பாராட்டி தள்ளிய பாரதி - வெறுப்பில் வெந்து போன வெண்பா! சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கண்ணம்மாவை பாராட்டி தள்ளிய பாரதி – வெறுப்பில் வெந்து போன வெண்பா! சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட் குறித்த சிலவற்றை கீழே ஒரு தொகுப்பாக பார்ப்போம்.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை டி ஆர் பி யில் முதலிடத்தில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில், பாரதியின் குடும்பத்தினர் கண்ணம்மாவின் பிறந்தநாளை முடித்து விட்டு வீட்டிற்கு செல்கின்றனர். வீட்டிற்கு சென்றதும் சௌந்தர்யா பாரதியிடம் இன்று தான் நீ பழைய பாரதி போல நடந்து கொண்டு இருக்கிறாய், நீ கண்ணம்மாவின் வீட்டிற்கு வந்தவுடன் நான் மிகவும் பயந்து போய் விட்டேன். ஆனால் நீ லட்சுமிக்கு எப்படி சொன்னால் புரிந்து கொள்வாளோ இப்படி கூறி புரிய வச்சுட்ட, நீ சொன்னது ரொம்ப சரியானதாக இருந்தது என்று பாரதியை புகழ்ந்து கூறினார்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ராதிகாவுடன் சேர்ந்த கோபி!

அதற்கு பாரதி, நீங்கள் யோசிப்பது மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை. எனக்கு லட்சுமியை மிகவும் பிடிக்கும். அதனால் தான் அவள் மனம் வாடக்கூடாது என்பதற்காக அவ்வாறு கூறினேன். மற்றபடி வேறு உள்நோக்கம் இல்லை என்றும் மேலும் உங்கள் சைடு என்னை இழுக்காதீர்கள் என்று கூறினார். அதை கேட்ட சௌந்தர்யா, நீ எப்ப தான் எங்கள் பக்கம் வர போற என்று கேட்கிறார். உடனே பாரதி, நான் ஒரு விஷயம் பண்ணும் போது அதுல கொஞ்சமாவது என் பக்கம் நியாயம் இருக்குன்னு யாரும் இந்த வீட்டில் யோசிக்கிறதே கிடையாது. ஆனால் இந்த வீட்டில் இத்தனை பேர் இருந்தாலும் எப்போதும் நான் தனியாக தான் இருக்கேன் பாரதி வருத்தப்பட்டு பேசுவதை ஹேமா பார்த்துவிடுகிறார்.

இதனை தொடர்ந்து இந்த பக்கம் கண்ணம்மா மிகுந்த வருத்தமாக இருக்கிறார். அதை பார்த்த வடிவுக்கரசி, உனக்கு இருந்த எல்லா பிரச்சனைகளுக்கும் உனது கணவர் பாரதி நல்லவிதமான ஒரு தீர்வு தந்துட்டு போய்ட்டாரு. அப்புறம் எதுக்கு நீ இப்படி வருத்தபட்டுட்டு இருக்க என்று கண்ணம்மாவிற்கு ஆறுதல் கூறுகிறார்.

விவாகரத்திற்கு பிறகு நடிகை சமந்தாவுக்கு ஏற்பட்ட திடீர் சோகம் – தொழில் முடக்கம்! ரசிகர்கள் ஷாக்!

அதனை தொடர்ந்து வெண்பாவின் வீட்டில் சாந்தி, கண்ணம்மா நல்லா அசிங்கப்பட்டால? உங்க கால்ல விழுந்து கதறினாளா? என்று வெண்பாவை கதற விடுகிறாள். அதற்கு வெண்பா, நீ வேற அங்கு என்ன நடந்து என்று தெரியாமல் என் கோபத்துக்கு ஆளாகாதே, அவ்வளவு பேர் முன்னாடி பாரதி கண்ணம்மாவை பாராட்டி பேசினார். நீதான் இந்த உலகத்திலேயே சிறந்த அம்மான்னு சொல்லும்போது எனக்கு அப்படியே பத்திக்கிட்டு எரிஞ்சது ‌என்று கூறி அவளை திட்டி விடுகிறாள். மேலும் லட்சுமி கண்ணம்மாவுடன் சென்று இனிமேல் நான் அப்பா வேண்டும் என்று கேட்ட மாட்டேன், எனக்கு அம்மா அப்பா எல்லாம் நீ மட்டும் தான் சொல்லும் போது கண்ணம்மா கண் கலங்குகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!