லட்சுமிக்கு உண்மை தெரிந்ததை கண்டுபிடித்த சௌந்தர்யா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த திருப்பம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. அந்த வரிசையில் அதிக பார்வையாளர்களையும், அதற்கு சமமான விமர்சனங்களையும் பெற்று ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் தற்போது லட்சுமி செய்த காரியம் கண்ணம்மாவுக்கு தெரியவந்ததால் குடும்பத்தில் புது பிரச்சனை ஒன்றும் வெடித்துள்ளது.
பாரதி கண்ணம்மா:
சமீப காலமாக டிஆர்பி ரேட்டிங்கில் தவறாது முதல் ஐந்துக்குள் இடம் பெற்று வரும் விஜய் தொலைக்காட்சியின் ஹிட் தொடர் பாரதி கண்ணம்மா தொடர்ந்து பல புது திருப்பங்களை கொண்டு நகர்கிறது. இந்த தொடர் விறுவிறுப்பாக செல்கிறதோ! இல்லையோ! ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட காலம் வரை ஒரு புது கதையை நுழைத்து ஜவ்வாக இழுக்கப்பட்டு இறுதியில் உப்பு சப்பு இல்லாமல் புஸ்ஸுனு முடிந்துவிடும். அந்த வகையில் கடந்த எபிசோடில் லட்சுமி அப்பாவை தேடும் முயற்சியில் இறங்கி தீவிரமாக தேடி வந்தார்.
சீரியலில் கட்டும் சேலை கலெக்சன் வீடியோ போட்ட “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா – குவியும் லைக்குகள்!
அப்போது லட்சுமிக்கு உண்மை தெரிந்தவுடன் கண்டிப்பாக ஒரு முடிவு இருக்கும், கண்ணம்மாவும் பாரதியும் இணைய வாய்ப்புகள் உள்ளது என அதிகளவு ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த போது சட்டுனு கதையை வேற ட்ராக்குக்கு கொண்டு சென்றனர். இப்படி ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்துடன் நகர்ந்த தொடர் பெற்ற விமர்சனங்களுக்கு அளவே இல்லை. இந்நிலையில் மீண்டும் லட்சுமி கதையை கொண்டு ஷாக் கொடுத்து சீரியலை விறுவிறுப்பாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். அதாவது இன்றைய எபிசோடில் லட்சுமி மறைத்து வைத்திருந்த பாரதி பெயர் பதிவிட்ட போர்டை கண்ணம்மா எதார்த்தமாக பார்த்து விடுகிறார்.
அதை எடுத்து பார்க்கையில் “அப்பா ஐ லவ் யூ” என இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். உடனே இது குறித்து மாமியார் சௌந்தர்யாவிடம் சொல்வதற்காக வீடியோ கால் செய்து அந்த பெயர் பலகையை காட்ட, அவரும், வேணுவும் அதிர்ச்சியில் உறைந்து பார்க்கிறார்கள். அப்போது கண்ணம்மா எப்படி லட்சுமிக்கு உண்மை தெரிந்தது என தெரியல, ஆனா என்னைக்கா இருந்தாலும் ஒரு நாள் தெரியவரும் விஷயம் தான் என தடுமாற்றத்துடன் பேசி இறுதியில் ஆவலாய் கூடிக்கொண்டு வீட்டுக்கு வரேன் அங்க வச்சு எல்லாம் பேசலாம் என சொல்லி போனை வைக்கிறாள்.
பிறகு அனைவரது குழப்பத்துக்கும் சௌந்தர்யா நல்யோசனையாக நாம ஏன் சிசிடிவி புட்டேஜ் பார்க்க கூடாது? என கேட்கிறார். உடனே மூவரும் அன்று கண்ணம்மா வீட்டுக்கு வந்து பேசிய போது, லட்சுமி பாரதி விஷயங்களை தெரிந்து கொண்டு போன காட்சியை பார்த்து கண் கலங்கினார்கள். எல்லா விஷயத்தையும் தாங்கிட்டு இப்படி இந்த சின்ன பொண்ணு அமைதியா இருக்கா. பெரியவங்களா இருந்து நம்மால் எதுவும் பண்ண முடியலையே என சொல்லி வருத்தப்படுகின்றனர். பிறகு அகிலன் அங்கு வந்து ஏன் தனியா உக்காந்து ரெண்டு பேரும் கண் கலங்கிட்டு இருக்கீங்க அப்படி என்ன ஆச்சு என்ன விஷயம் எனக் கேட்க சௌந்தர்யாவும் நடந்ததை கூறுகிறாள்.
Exams Daily Mobile App Download
உடனே அகிலனும் இதுக்குத்தான் அன்னைக்கு லட்சுமியிடம் உண்மையை சொல்லிவிடலாம்ன்னு சொன்னேன். ஆனால் இன்னைக்கு எங்க கொண்டு வந்து இருக்கா பாத்தீங்களா என ஆதங்கம் கொள்கிறார். அதன் பின்னர் வீட்டுக்குள் போய் வேணு, லட்சுமியிடம் செல்லம் தாத்தாவுக்கு ஒரு முத்தம் கொடுக்கிறியா கேட்க சற்று யோசித்த லட்சுமி நம்ம தாத்தா தானே என முத்தம் கொடுக்கிறாள். பிறகு சௌந்தர்யா தாத்தாவுக்கு மட்டும் தானா எனக்கு இல்லையா என ஏக்கத்துடன் செல்ல கொஞ்சலுடன் முத்தத்தை கேட்டு வாங்குகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.