விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரோஷினியின் புதிய பதிவு – குவியும் லைக்குகள்! ரசிகர்கள் வாழ்த்து!
பாரதி கண்ணம்மா தொடரில் நடித்ததன் மூலம் அதிக ரசிகர்களை பெற்ற நடிகை ரோஷினி தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புதிய பதிவை வெளியிட்டுள்ளார். அவர் சுற்றுலா சென்ற சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிக லைக்குகளை குவித்து வருகின்றனர்.
ரோஷினியின் பதிவு:
முதலில் தனியார் பேங்கிங் துறையில் வேலை செய்து வந்த ரோஷினி, தனக்கு அந்த வேலை மனதிற்கு நெருக்கமாக இல்லை என்று, தனக்கு பிடித்த மாடலிங் துறையில் முழு நேரம் குதித்துள்ளார். மாடலிங்கில் இவரது தனித்திறமையை பார்த்து அதிக வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியுள்ளது. அதனால் அதிக பிரபலம் அடைய தொடங்கியுள்ள நிலையில் தான் விஜய் டிவி இயக்குனர் பிரவீன் மூலமாக பாரதி கண்ணம்மா சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இன்னும் 5 நாட்களில் முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்? ப்ரோமோவால் உருவான புதிய குழப்பம்!
கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு ரோஷினி மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று தான் அழைத்திருக்கிறார்கள். அதேபோல் ரோஷினி கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்தது போல் இருந்தது. இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்னதாக இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து சில காரணங்களினால் விலகுவதாக கூறிவிட்டு சென்றார். இதனால் ரோஷினியின் ரசிகர்கள் அதிகம் வருத்தமடைந்தனர். அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பது போல் சமீபத்தில் வெளியான குக் வித் கோமாளி சீசன் 3 இல் போட்டியாளராக ரோஷினி கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டு ப்ரோமோ வெளியாகியது.
கண்ணம்மா உடன் சேர்ந்து வாழ பாரதி போடும் கண்டிஷன் – வைரலாகும் ப்ரோமோ! ரசிகர்கள் ஷாக்!
இதனால் ரோஷினியை மீண்டும் திரையில் காண இருப்பதால் ரசிகர்கள் அதிக உற்சாகம் அடைந்துள்ளனர். தற்போது ரோஷினி தனது இன்ஸ்டா பக்கத்தில் சுற்றுலா சென்ற புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவர் அடிக்கடி இது போல் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ‘டிராவல் இஸ் தெரபி’ என்று குறிப்பிட்டுள்ளார். மிகவும் அழகாக எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு அதிக லைக்குகள் குவிந்து வருகின்றது.