இன்னும் 5 நாட்களில் முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்? ப்ரோமோவால் உருவான புதிய குழப்பம்!

0
இன்னும் 5 நாட்களில் முடிவுக்கு வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியல்? ப்ரோமோவால் உருவான புதிய குழப்பம்!
இன்னும் 5 நாட்களில் முடிவுக்கு வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியல்? ப்ரோமோவால் உருவான புதிய குழப்பம்!
இன்னும் 5 நாட்களில் முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்? ப்ரோமோவால் உருவான புதிய குழப்பம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது சில எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்று வரும் சூழலில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ ஒன்று, இத்தொடர் இன்னும் 5 நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறதா என்று ரசிகர்கள் மத்தியில் புதிய குழப்பங்களை உருவாக்கி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா

மக்களின் பேராதரவுடன் தற்போது 695 எபிசோடுகளை கடந்திருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இன்னும் 5 நாட்களில் சில எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேற இருக்கிறது. இதுவரை இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதியும், கண்ணம்மாவும் ஒன்று சேரும் தருணத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக பல ஸ்வாரசியமான எபிசோடுகள் ஒளிபரப்பானது. அந்த வகையில் கண்ணம்மாவை அழைத்து கொண்டு கோவிலுக்கு செல்லும் பாரதிக்கு, கண்ணம்மா உண்மையானவள் என்ற விளக்கம் கடவுள் மூலமாக கிடைக்கிறது.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியாவாக களமிறங்கும் செம்பருத்தி ஷபானா? ரசிகர்கள் ஷாக்!

என்றாலும் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என உறுதியாக இருக்கும் பாரதி, கடவுள் சொல்வதை கேட்கப்போவதில்லை. எனது மனசாட்சியின் படி தான் நடப்பேன் என வேதாளம் போல மீண்டும் முருங்கை மரம் ஏறி இருக்கிறார். ஆனால் பாரதியின் இந்த நடவடிக்கையினால் கோபப்படும் கண்ணம்மா இத்தனை ஆண்டு காலமாக பாரதியிடம் பேச நினைத்த அத்தனை விஷயங்களையும் கொட்டி தீர்த்து விடுகிறார். இதற்கு பிறகு பாரதியின் முடிவு என்னவாக இருக்கும் என்று இந்த சீரியல் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியான ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ப்ரோமோவில் பாரதி, கண்ணம்மாவின் கையை பிடித்து சௌந்தர்யா வீட்டுக்கு அழைத்து வருவதை போலவும் கண்ணம்மாவை தனக்கு மனைவியாக ஏற்றுக்கொள்வதாக சொல்லும் சில காட்சிகளும் இடம் பிடித்திருந்தது. ஆனால், இப்படி எல்லாம் செய்வதற்கு பாரதி ஒரு நிபந்தனை விதிப்பது போலவும் அது என்னவென்று தெரிந்து கொள்ள இன்னும் 5 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றும் அந்த ப்ரோமோவில் ஒரு ட்விஸ்டு வைக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் இன்னும் 5 நாட்களில் இந்த சீரியலில் என்ன நடக்கபோகிறது என ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் இன்னும் 5 நாட்களில் முடிவுக்கு வரப்போகிறதா, இன்னும் DNA டெஸ்ட் எடுக்கப்படவில்லையே என்று ரசிகர்கள் மத்தியில் புதிய குழப்பங்களும் உருவாகி இருக்கிறது. அதே நேரத்தில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் வெண்பா அதாவது நடிகை பரினா தற்போது கலர்ஸ் தமிழின் ‘அபி டெய்லர்’ சீரியலில் பவானியாக நடிக்க இருப்பதால் இந்த சீரியலில் தொடர மாட்டாரா என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களை பதிவிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் பைனலுக்கு வராததற்கு இதுதான் காரணம் – இமான் அண்ணாச்சி ஓபன் டாக்!

இந்த குழப்பங்களுக்கு எல்லாம் முடிவு கிடைக்கும் விதமாக தான் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் புதிய திருப்பம் அமையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் தெலுங்கு பதிப்பான ‘கார்த்திகை தீபம்’ தொடரில் DNA டெஸ்ட் எடுத்து பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் மீண்டுமாக ஒன்று சேரும் போது பாரதிக்கு கேன்சர் வருவது போல காட்டப்பட்டு வருகிறது. இதே போல தமிழ் மொழியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதைக்களமும் அமையும் என்று புதிய தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!