சென்னை மழை வெள்ளத்தில் சிக்கிய பாரதி, கண்ணம்மா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்! ரசிகர்கள் குஷி!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது கண்ணம்மா மற்றும் பாரதி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வரும் நிலையில், வீட்டுக்குள் புகுந்திருக்கும் மழை நீரை அகற்றும் போது அவர்களுக்குள் நெருக்கம் உருவாவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா
ஒவ்வொரு நாளும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க புத்தம் புது பொலிவுடன் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது ஸ்வாரசியமான கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் கோர்ட் உத்தரவுப்படி பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக சேர்ந்து கண்ணம்மா வீட்டில் வசித்து வருகின்றனர். இதற்கிடையில், எப்படியும் 6 நாட்கள் கூட கண்ணம்மா வீட்டில் இருக்க மாட்டேன் என பாரதி சபதமெடுத்திருக்கிறார்.
ரியல் ஜோடியாக மாறும் கலர்ஸ் டிவி ‘அம்மன்’ சீரியலின் அமல்ஜித், பவித்ரா? ரசிகர்கள் வாழ்த்து!
இப்படி இருக்க அன்று இரவு பெய்த கனமழையால் கண்ணம்மா வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதை சுதாரித்து கொண்ட பாரதி, தூங்கி கொண்டிருக்கும் கண்ணம்மாவை எழுப்புகிறார். பிறகு வீட்டுக்குள் புகுந்த மழை நீரை என்ன செய்வது என பாரதி கேட்க, அதனை அள்ளி வெளியே ஊற்ற வேண்டும் வேறு வழியில்லை என கண்ணம்மா சொல்கிறார். பிறகு கண்ணம்மா மழை நீரை எடுத்து வாளியில் ஊற்றிக்கொண்டிருக்க பாரதி வந்து அவருக்கு உதவி செய்கிறார்.
‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய இசைவாணி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் ஷாக்!
அடுத்து வெளியே சென்று தண்ணீரை ஊற்றி விட்டு வீட்டுக்குள் வரும் பாரதி, கால் வழுக்கி கீழே விழப்போக கண்ணம்மா அவரை தாங்கி பிடிக்கிறார். இப்போது இருவரது பார்வையும் நேராக சந்திக்கின்றவாறு ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களத்துக்கான ப்ரோமோவை கண்ட ரசிகர்கள் பலரும் பாரதியும் கண்ணம்மாவும் இப்படியே இருக்க வேண்டும் என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.