‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய இசைவாணி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் வெளியேறிய இசைவாணி வீட்டை விட்டு வெளியேறிய பின் தாமரை மற்றும் ராஜு பற்றி பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் இசைவாணி:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. கடந்த மாதம் கோலாகலமாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதுவரை 54 நாட்கள் கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நமீதா, நதியா சாங், அபிஷேக் ராஜா, சின்னப் பொண்ணு, சுருதி, மதுமிதா இசைவாணி என்று 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். இதில் ஏற்கனவே வெளியேறிய அபிஷேக்கை மீண்டும் வைல்டு கார்டு மூலம் கொண்டு வந்துள்ளனர்.
அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வந்துள்ளனர். இந்த சீசனில் பல தெரியாத முகங்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் கானா பாடகர் இசைவாணியும் ஒருவர். அவர் சீசன் தொடங்கிய நாள் முதல் பலரிடம் நெருக்கமாக பழகாமல் இருக்கிறார். அதனால் அவர் தொடர்ந்து நாமினேட் செய்யப்பட்டார். மேலும் பிடிக்காமல் ஒருவர் இருந்தால் அவருடன் அடிக்கடி சண்டை போட்டு வருவார். குறிப்பாக இமான், தாமரையுடன் அவர் சண்டை போடுவார்.
விஜய் டிவி ‘Mr & Mrs சின்னத்திரை’ பைனலுக்கான வைல்ட் கார்ட் சுற்று – கலகலப்பான ப்ரோமோ!
கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகள் பெற்று அவர் வெளியேறிய நிலையில் தாமரை ஒரு பச்சோந்தி ஆளுக்கு தகுந்தாற்போல் பேசுவார் என இசைவாணி தெரிவித்துள்ளார். எனக்கு கோவம் வந்தால் அடிச்சுருவேன் தாமரையை அடித்திருப்பேன் என சொல்லி இருக்கிறார். எனக்கு கேம் புரியவில்லை என மற்றவர்கள் நன்றாக விளையாடி இருக்காங்க என்று சொன்ன அவர் ராஜு பற்றி கேட்டதற்கு அவர் எதுவும் செய்யாமல் மிச்சர் மட்டுமே சாப்பிடுவார் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே வீட்டில் அவர் சொன்னதற்கு சண்டையை விட மிச்சர் நன்றாக இருந்தால் சாப்பிடலாம் என நகைச்சுவையாக ராஜு பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.