பாரதி & கண்ணம்மா பிரிந்ததற்கு காரணமே பாக்கியா தான் – ரசிகர்கள் கமெண்ட்!!
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து நடக்கவிருக்கும் எபிசோட் பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
பாக்யலட்சுமி சீரியல்
ஒரு சாமானிய குடும்ப பெண் சந்தித்து வரும் பிரச்சினைகளை மிகவும் அழகாக எடுத்து காட்டுகிறது பாக்கியலட்சுமி சீரியல். தற்போது முக்கிய கட்டமாக ஜெனி கர்ப்பமாக இருக்கிறார். ஆனால் செழியனுக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. எப்படியாவது இந்த கருவை கலைத்துவிட வேண்டும் என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருக்கிறார். ஆனால் ஜெனி மற்றும் குடும்பத்தினர் இதனை எதிர்த்து அவரிடம் போராடுகின்றனர். ஆனால் செழியன் நினைத்தது போலவே ஜெனியின் கரு கலைந்து விடுகிறது.
8 வருடங்களுக்கு பிறகு தொடங்கும் ‘பாரதி கண்ணம்மா சீசன் 2’? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
இதற்கு காரணம் பாக்கியா தான் என்று குடும்பத்தினர் அனைவரும் அவர் மீதும் குற்றச்சாட்டை வைக்கின்றனர். தொடர்ந்து மன அழுத்தத்தினை கொடுத்ததால் தான் ஜெனியின் கரு கலைந்து விட்டது என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இதனை பார்த்து விட்டு ரசிகர்கள் வீட்டினர் அனைவரும் பாக்கியாவை குற்றம் சுமத்திக் கொண்டே இருக்கின்றனர் என்று கேள்விகள் எழுப்பி வருகின்றனர். அதே போல் டைரக்டர் ஆரம்ப கட்டத்தில் இருந்து பாக்கியாவை தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என்று கூறுகிறார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஹேமாவிடம் உண்மையை கூறிய கண்ணம்மா, ஷாக்கான பாரதி – பலவித திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!
இன்னும் விட்டால் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்ததற்கு கூட பாக்கியா தான் காரணம் என்று கூறி விடுவார் போல என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். எல்லாவற்றுக்கும் ஒரு குடும்ப பெண்தான் காரணமாக இருக்கிறார் என்பது போன்று இப்படி சித்தரிப்பது சரியானதாக இல்லை என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாக்கியலட்சுமி சீரியலில் கதைக்களம் சற்று மாறினால் இன்றும் இன்னும் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.