ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் – தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்!
நாடு முழுவதும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 518 வெளிமாநில தொழிலாளர்கள் பலனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், திருப்பூர் மாவட்டம் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளதாக தெரிகிறது.
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்:
நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும், ஒரே கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் திட்டம் தான் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஆகும். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்க முடியும். மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொது விநியோக அமைச்சகம் சார்பில் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டு தமிழக அரசின் பொது விநியோகத் திட்ட அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது.
தமிழ் தெரிந்தவர்களுக்கு தமிழக அரசு வேலை 2021 – உடனே விரையுங்கள்!
ரேஷன் அட்டைகள் ஸ்மார்ட் கார்டுளாக மாற்றப்பட்டுள்ளதால் ஒவ்வொரு முறையும் இந்த கார்டைப் பயன்படுத்தி எங்கு பொருள் வாங்கினாலும் அது மையமாக இருக்கும் ஒரு பொது தரவுத்தளத்தில் சேர்க்கப்படும். இதற்காக அனைத்து ரேஷன் கடைகளும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. முன்னதாகவே அனைத்து உறுப்பினர்களின் கைரேகைகளும் ஸ்மார்ட் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 26 மாநிலங்களை சேர்ந்த 58, 332 ரேஷன் அட்டைதாரர்கள் பலனடைந்துள்ளனர்.
நடப்பு அக்டோபர் மாதத்தில் இதுவரை 1,015 டன் கோதுமை, 319 டன் அரிசி, ரேஷன் கடை வாயிலாக வினியோகிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 518 வெளிமாநில தொழிலாளர் பயனடைந்துள்ளதாகவும், குறிப்பாக திருப்பூரில் மட்டும் 418 பேர் பயனடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள், ஒரே நாடு- ஒரே ரேஷன் திட்டம் வெளிமாநில தொழிலாளர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் அதிகம் பேர் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர் என்று கூறினார்கள்.