பாரதி & கண்ணம்மாவுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடும் ஹேமா – லட்சுமியின் முடிவு என்ன? ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அம்மா இல்லாமல் தவித்து வரும் ஹேமா, கண்ணம்மாவை பாரதிக்கு திருமணம் செய்து வைக்க லட்சுமியிடம் யோசனை கேட்பது போல் வெளியாகி இருக்கும் ப்ரோமோ ஒன்று ரசிகர்ளின் கவனம் பெற்று வருகிறது.
பாரதி கண்ணம்மா
இத்தனை நாட்களாக இது நடக்காதா என்று ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் அந்த தருணம் விரைவில் நடக்க இருக்கிறது. அதாவது, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒன்று பாரதியிடமும், ஒன்று கண்ணம்மாவிடமும் வளர்ந்து வருகிறது. ஒரு கட்டத்தில் இந்த 2 குழந்தைகளும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள, இருவரும் உண்மையான சகோதரிகள் என்று தெரியாமல் நண்பர்களாக பழகி வருகின்றனர். தவிர, குடும்ப பிரச்சனையில் இந்த குழந்தைகளிடம் பாரதி, கண்ணம்மா தான் உங்களது பெற்றோர் என்று சொல்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
தமிழகத்தில் நாளை (மார்ச் 20) தனியார் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!
மறுபக்கத்தில் கண்ணம்மாவிடம் இருக்கும் லட்சுமி தனது அப்பா யார் என்று தெரியாமல் தேடி அலைய ஹேமாவும் தன் அப்பாவுக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறார். இப்போது இந்த 2 குழந்தைகளும் ஒரே பாதையில் பயணிக்க ஹேமா ஒரு முக்கிய முடிவு எடுக்கிறார். இது தொடர்பாக வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், தனது அப்பா பாரதிக்கு லட்சுமியின் அம்மா கண்ணம்மா, அதாவது சமையல் அம்மாவை திருமணம் செய்து வைக்க யோசிக்கும் ஹேமா இது பற்றி லட்சுமியிடம் பேசுகிறார். இப்போது முதலில் பேச ஆரம்பிக்கும் ஹேமா, லட்சுமி நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று கூற என்னது ரகசியம் சொல்ல போகிறாயா.
ரயிலில் இன்று முதல் முன்பதிவில்லா பயணம் – மகிழ்ச்சியில் பொதுமக்கள்!
நான் எதுவும் சொல்ல மாட்டேன் நீ சொல்லு என்று லட்சுமி உற்சாகமாக கேட்கிறார். அப்போது, லட்சுமி உனக்கு அப்பா இல்லை எனக்கு அம்மா இல்லை. அதனால் உங்க அம்மாவுக்கும் என் அப்பாவுக்கும் கல்யாணம் பண்ணி வைத்தால் எப்படி இருக்கும் என்று கேட்க லட்சுமி யோசிப்பது போல அந்த ப்ரோமோ காட்சிகள் முடிவடைகிறது. இப்போது பாரதி மற்றும் கண்ணம்மா தான் தங்களுடைய பெற்றோர்கள் என்று தெரியாமல் இந்த 2 குழந்தைகள் எடுக்கப்போகும் முடிவால் பாரதி, கண்ணம்மாவின் வாழ்க்கை எப்படி மாறப்போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.