தமிழகத்தில் நாளை (மார்ச் 20) தனியார் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!
தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சிறிய தனியார் வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது அங்கு உள்ள வேலை தேடி வரும் பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு ஆகும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் சென்ற இரண்டு வருடங்களாக கொரோனாவின் பரவல் அதிகமாக இருந்த காரணத்தால் மாநிலத்தில் இரு ஆண்டுகளாக கடும் ஊரடங்கு நிலவி வந்தது. மேலும் இந்த ஊரடங்கின் காரணமாக படித்த இளைஞர்களும் வேலை இல்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் சென்ற வருடம் இறுதியில் கொரோனா தொற்று பரவல் குறைந்த காரணத்தால் ஊரடங்கில் தளர்வுகளை தெரிவித்து இருந்தது தமிழக அரசு. மேலும் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் பழைய படி திறக்க பட்டு தமிழகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. மேலும் தமிழக அரசு கொரோனா காலத்தில் தெரிவிக்காமல் இருந்த வேலைவாய்ப்புகளை சமீபத்தில் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது TNPSC குரூப் 2, 2A ஆகிய தேர்வுகளுக்கான தேதிகளை அறிவித்து அதற்கான வேலைகளையும் செய்து வருகிறது. அடுத்ததாக குரூப் 4 தேர்வுக்கான தேதியையும் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
ரயிலில் இன்று முதல் முன்பதிவில்லா பயணம் – மகிழ்ச்சியில் பொதுமக்கள்!
இது தவிர தனியார் துறையும் தங்களது வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இவ்வாறு தனியார் துறையும் இளைஞர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு செய்தி குறிப்பு வெளியாகி உள்ளது. அந்த செய்தி குறிப்பு என்னவென்றால், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகிய துறைகள் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வருகின்ற மார்ச் 20ஆம் தேதி வண்டலூர், பி.எஸ்.அப்தூர் ரஹ்மான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடக்க உள்ளது. இந்த முகாமில் 400 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் அயல்நாட்டு நிறுவனங்களும் பங்கு பெற்ற உள்ளது. மேலும் 50,000க்கும் மேற்பட்ட காலிடங்களை நிரப்ப உள்ளது.
TNPSC குரூப் 2, 2A தேர்வு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – புதிய அறிவிப்பு வெளியீடு!
இந்த முகாமில் கலந்து கொள்ள தேவையான தகுதிகள், கல்வி தகுதியாக 8ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் வரையும், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், ஃபார்மசி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் பங்கு கொள்ளலாம். மேலும் இந்த முகாமில் பங்கு பெறுபவர்கள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கல்வி தகுதி சான்றிதழ் நகல்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் நேரில் வந்து தங்களுக்குத் தகுதியான வேலை வாய்ப்புகளை பெற்று கொள்ளலாம் என்று ஆட்சியர் கூறியுள்ளார்.