‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து ஓய்வெடுத்த அருண் – போட்டோ ரிலீஸ்! ரசிகர்கள் அதிர்ச்சி!
பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியாக நடித்து வரும் நடிகர் அருண் சமூக மிகவும் ஆக்ட்டிவாக இருக்க கூடியவர். தற்போது அவரது புதிய பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதனால் பாரதி கண்ணம்மா தொடரில் சில நாட்களுக்கு அவரை காண முடியாது என்றும் தெரிகிறது.
‘பாரதி கண்ணம்மா’ அருண்:
நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள் எப்படியாவது திரைத்துறையில் சாதிக்க வேண்டும், தங்களின் பெயரும், முகமும் மக்கள் மனதில் நிலைக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர். பலருக்கும் இந்த புகழ் எளிதில் கிடைத்து விடுவதில்லை. நடிப்பு துறையில் பல வருடங்களாக பணியாற்றியும் இன்னும் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் உள்ளவர்கள் பலர் உள்ளனர். ஆனால் இதில் விதிவிலக்காக ஒரு சிலர் தங்களின் தனித்தன்மையான நடிப்பினால் நடிக்க தொடங்கிய ஒரு சில திட்டங்களிலேயே மக்கள் மனதில் பதிந்து விடுகின்றனர். அவர்களுக்கான அங்கீகாரமும், புகழும் கிடைத்து விடுகிறது. அப்படி எளிதில் மக்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் தான் அருண்.
பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியாக நடித்து வருகிறார். இந்த தொடரில் முதலில் அம்மாவின் பேச்சுக்கு மிகவும் மதிப்பு கொடுக்கும் மகனாகவும், கண்ணம்மாவை காதலிக்கும் போதும், அதன்பிறகு கண்ணம்மாவை திருமணம் செய்து கொண்ட பிறகு, கண்ணம்மாவை வெறுக்கும் போதும், தற்போது ஒரு குழந்தைக்கு பாசமிகு அப்பாவாக நடிக்கும் போதும் தன் நடிப்பின் வெல்வேறு பரிமாணங்களை காட்டி இருப்பார். இந்த தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணிகளில் அருணும் ஒருவர். அருண் சமூக வலைத்தளங்களில் எப்போது பிசியாக இருப்பார். அடிக்கடி ஏதேனும் பதிவுகளை பதிவு செய்து கொண்டிருப்பார்.
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தின் ஸ்டோரியில் தான் டெல்லிக்கு செல்வதாகவும், டெல்லியில் இருந்தும் சில வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அதில் வேகேசன் என்று டேக் செய்திருந்தார். இதன் மூலம் அவர் விடுமுறைக்காக டெல்லிக்கு சென்றிருக்கிறார் என்பது தெரிகிறது. இந்த பயணத்தின் காரணமாக நடிகர் அருண்-ஐ ஒரு சில நாட்கள் பாரதி கண்ணம்மா தொடரில் காண முடியாது. தற்போது மிகவும் பரபரப்பான காட்சிகள் தொடரில் வந்து கொண்டிருக்கும் நிலையில், அருண் டெல்லிக்கு சென்றுள்ளார். அருண் வெளியிட்டுள்ள வீடியோ இன்ஸ்டாவில் வைரலாக உள்ளது. இதனால் பாரதியின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.