சாதாரண பெண்ணாக இருந்து பாரதியின் கண்ணம்மாவாக மாறிய ரோஷினி – அவரே சொன்ன தகவல்!
பாரதி கண்ணம்மா சீரியலில் கடந்த 2 ஆண்டுகளாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் கலக்கி வந்த நடிகை ரோஷினி ஒரு பேட்டி ஒன்றில் தான் சினிமாவிற்கு எப்படி வந்தேன் என்பது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
நடிகை ரோஷினி:
விஜய் டிவியில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா இருக்கிறது. இந்த சீரியல் பாரதி மற்றும் கண்ணம்மாவின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டே கதை இருக்கிறது. பாரதி கதாபாத்திரத்தில் நடிகர் அருண் நடித்து வருகிறார். அவர் மேயாத மான் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் கண்ணம்மாவாக நடிகை ரோஷினி ஹரிபிரியன் நடித்து வந்தார்.
திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் ரேஷ்மாவிடம் சண்டையிடும் மதன் – “அபி டெய்லர்” மேக்கிங் வீடியோ!
சீரியல் தொடக்கம் முதல் 600 எபிசோடுகளுக்கு மேல் கண்ணம்மாவாக ரோஷினி நடித்து இருக்கிறார். எம்பிஏ பட்டதாரியான அவருக்கு நடிப்பு துறையில் இது தான் முதல் வாய்ப்பு. மேலும் இவர் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவராம், படித்து விட்டு ஒரு நிறுவனத்தில் 9 மணிக்கு சென்று 5 மணிக்கு வரும் சாதாரண பெண்ணாக இருந்தேன். ஆனால் அந்த வேலை பிடிக்காமல் அதனை விட்டுவிட்டு தனியாக தொழில் செய்தாராம். மேலும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருப்பதால் விதவிதமாக போட்டோக்களை எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கம்.
வலிமை படத்திற்காக நடிகர் அஜித் வாங்கிய சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!
அப்படி ஒருநாள் அவருடைய புகைப்படத்தை பார்த்து தான் பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் இவரை தொடர்பு கொண்டாராம். அதன் பின் அவருக்கு வாழ்க்கை முழுவதும் ஒரே நாளில் மாறிவிட்டதாம், கண்ணம்மாவாக வாழ்ந்து வந்த அவர் சீரியலில் இருந்து திடீரென விலகியதால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். இருந்தாலும் அவருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகள் பல வருவதால் விரைவில் தியேட்டரில் பார்க்கலாம் என உற்சாகத்தில் இருக்கின்றனர்.