அரசு ஊழியர்களுக்கு 15 முதல் 20 சதவீதம் சம்பள உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!
ஹிமாச்சலப் பிரதேச அரசு ஊழியர்களுக்கு 15% முதல் 20% வரை ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய ஊதிய விகிதங்கள் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு
இன்னும் ஒரு வருடத்திற்கு பிறகு நடைபெற இருக்கும் மாநில சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு, ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு, ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் ஹிமாச்சலப் பிரதேசத்தின் சுமார் 1.90 லட்சம் ஓய்வூதியதாரர்கள் தவிர 2 லட்சம் ஊழியர்களின் ஊதிய விகிதங்கள் கணிசமான உயர்வை கண்டுள்ளது. இந்த புதிய ஊதிய விகிதங்கள் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத்தேர்வு – விரைவில் அறிவிப்பு!
இப்போது ஹிமாச்சலப் பிரதேசத அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தில் சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. இதனால் மாநில அரசின் கருவூலத்தில் ஆண்டுக்கு ரூ.4000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் ஒவ்வொரு ஊழியரும் பெறும் சரியான சம்பள உயர்வு குறித்து கேட்கையில், அது 15 முதல் 20 சதவீதம் வரை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து – WHO அறிவுறுத்தல்! ஓமைக்ரான் பரவல் எதிரொலி!
ஆனால் 21 சதவீத இடைக்கால நிவாரணத்தின் பின்னணியில் பார்த்தால், ஒவ்வொரு வகை ஊழியருக்கும் இந்த உயர்வு 25 சதவீதத்திற்கு மேல் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் பஞ்சாப் மாநிலத்திலும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பிற பிரிவுகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்க அரசு ஆலோசித்து வருகிறது. முந்தைய பஞ்சாபின் ஒரு பகுதியாக இருந்த ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் அரசின் ஊதியம் மற்றும் பிற சேவை நிலைமைகளை இன்று வரையும் பின்பற்றுகிறது குறிப்பிடத்தக்கது.