‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் மற்றொரு முக்கிய நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து பல முக்கிய கதாபாத்திரங்கள் விலகி வந்த நிலையில், தற்போது மீண்டும் ஒருவர் சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முக்கிய நடிகை விலகல்:
பாரதி கண்ணம்மா சீரியலில் சமீப நாட்களாக அடுத்தடுத்து பல முக்கிய கதாபாத்திரங்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. முதலில் அகிலன் வேடத்தில் நடித்தவர் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக ஒருவர் அகிலனாக நடித்தார். அதன் பிறகு கண்ணம்மாவின் அப்பா வேடத்தில் நடித்தவர் இறந்து விட அவருக்கு பதில் ஒரு நடிகர் மாற்றம் செய்யப்பட்டார். இவர்களின் வரிசையில் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மா வேடத்தில் நடித்த ரோஷினி மாற்றம் செய்யப்பட்டு வினுஷா என்ற புதுமுகம் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சில நாட்களாக பாரதி கண்ணம்மா வில்லி வெண்பா கலர்ஸ் தமிழ் சேனலில் அபி டெய்லர் என்ற சீரியலில் நடிக்க உள்ளதாக ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது. இதனால் பாரதி கண்ணம்மா சீரியல் முடிய போகிறதா என்று சில தகவல்கள் பரவி வருகிறது. ஏனென்றால் பாரதியும், கண்ணம்மாவும் ஒன்றாக சேர இருப்பது போல் ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது. கண்ணம்மாவின் தங்கையாக நடித்து வரும் அஞ்சலி கதாபாத்திரம் சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர் ஜீ தமிழ் சேனலில் சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கியுள்ளார். இது தவிர ஒரு புதிய சீரியலில் கண்மணி மனோகரன் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சீரியலில் கண்மணிக்கு ஜோடியாக அருண் பத்மநாபன் என்பவர் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். இதனால் கண்மணி அஞ்சலி கதாபாத்திரத்தில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.