கண்ணம்மாவை மனதார மீண்டும் ஏற்றுக் கொள்ளும் பாரதி, ஆனாலும் ஒரு ட்விஸ்ட் – ‘பாரதி கண்ணம்மா’ கவுண்ட் டவுன்!
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவும், பாரதியும் கடந்த 9 வருடங்களாக பிரிந்திருந்த நிலையில் தற்போது 10ம் வருட திருமண நாளை ஒன்றாக சேர்ந்து கொண்டாட இருக்கிறார்கள். இந்நிலையில், சீரியலில் முக்கிய திருப்பமாக அமைய உள்ள இந்த காட்சிகளுக்கு கவுண்ட் டவுன் கொடுக்கப்பட்டுள்ளது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் கதையின் போக்கு எதிர்பாராத விதமாக சில மாதங்களுக்கு முன்னர் மாற்றப்பட்டது. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு தான் கதை ஆரம்பிப்பது போல் தொடங்கப்பட்டது. அப்போது கண்ணம்மா லட்சுமியுடன் தனியாகவும், பாரதி ஹேமா மற்றும் குடும்பத்தினருடன் இருப்பதாகவும் காட்டப்பட்டது. தன் மீது சந்தேகப்பட்ட பாரதியை விட்டு கண்ணம்மா தனியாக வாழ்ந்து காட்டியது அனைவரையும் கவர்ந்தது. இதனால் சீரியல் டாப் கியரில் சென்றது. ஆனால் கண்ணம்மா கதாபாத்திரம் மாற்றப்பட்டதால் இடையில் ரேட்டிங் சரிந்து வந்தது.
வருங்கால மனைவியை அறிமுகம் செய்து வைத்த குக் வித் கோமாளி புகழ் – சிவாங்கி வாழ்த்து!
இதனால் சீரியலை பழையபடி ரேட்டிங்கில் முன்னிலையில் கொண்டு வருவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டது. கண்ணம்மாவும், பாரதியும் நாளடைவில் தங்கள் கோவத்தை மறந்து சமாதானம் ஆக தொடங்குகிறார்கள். தங்கள் பழைய மலரும் நினைவுகளை நினைத்து கொள்கின்றனர். இப்படி இருக்கையில் இவர்களின் 10ம் திருமண நாளை சிறப்பாக கொண்டாட சௌந்தர்யா நினைத்து ஏற்பாடுகளை செய்து வருகிறார். முதலில் வேண்டா வெறுப்பாக பாரதி இதற்கு சம்மதிக்கிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் அஞ்சலி ஸ்வீட்டி? இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் ஷாக்!
திடீரென்று கண்ணம்மா மனம் உடைந்து கதறி அழுவதை பார்த்து பாரதி மனம் மாறுகிறார். இனி வரும் எபிசோடுகளில் பாரதியும், கண்ணம்மாவும் ஒன்றாக சேர்ந்து குடும்பத்தினரை சந்திக்க செல்கின்றனர். இதனால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கண்ணம்மாவிடம் பாரதி உன்ன நான் முழுசா எடுக்குறேன், உனக்கு எல்லாம் செய்றேன். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் என்று ஒரு ட்விஸ்ட் வைக்கிறார். இதற்கான ப்ரோமோ கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதற்கான கவுண்ட் டவுன் தற்போது 2 நாட்களில் உள்ளது. இது என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.