ஆஸ்திரேலிய ஓபனுக்கு பிறகு ஓய்வு பெறும் இந்திய வீராங்கனை சானியா மிர்ஸா – ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் தொடர் முடிந்த பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற முதல் சுற்றில் தோல்வி அடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சானியா மிர்ஸா தான் ஓய்வு பெறுவதாக பேட்டியளித்துள்ளார்.
ரசிகர்கள் அதிர்ச்சி:
2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிர்ஸா இந்திய பெடரேசன் கோப்பைக் குழுவில் சேர்ந்து இந்தியாவுக்காக தனது முதல் போட்டியை விளையாடினார். இதை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு அனைத்து மூன்று ஒற்றையர்கள் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றார். 35 வயதான சானியா மிர்ஸா கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவுக்காக டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்பதும் பல கோப்பைகளை கைப்பற்றி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
TNPSC கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு! இன்னும் 2 நாள் மட்டுமே!
மேலும் சானியா மிர்ஸா 34 கிராண்ட்ஸ்லாம் இரட்டையரில் 6 பட்டம் வென்றுள்ளார். ஒலிம்பிக்கில் நான்கு முறை (2008, 2012, 2016, 2021) பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். 2016 ஆம் ஆண்டு சானியா மிர்ஸாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்புக்கு பிறகு 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மீண்டும் விளையாடத் தொடங்கினார் . 14வது ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கும் சானியா மிர்ஸா 19 வருடங்களாக விளையாடி வருகிறார்.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து கொண்டு வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் தோல்வி அடைந்த நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு குறித்து அறிவித்திருந்தாலும் தனது கடின உழைப்பால் உடல் எடையை குறைத்து இளம் தலைமுறை தாய்மார்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறார்.