‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் அஞ்சலி ஸ்வீட்டி? இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் ஷாக்!
தற்போது விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஸ்வீட்டி, புதிய சீரியல் ஒன்றில் லீட் ரோலில் நடிக்க கமிட் ஆகி இருப்பதால் பாரதி கண்ணம்மாவை விட்டு விலகுவதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.
நடிகை ஸ்வீட்டி
சமீப காலமாக விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக சீரியல்களை விட்டு விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் இருந்து நடிகை ரோஷினி விலகியதை தொடர்ந்து இவருக்கு பதிலாக தற்போது கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் புதுமுக நடிகை வினுஷா என்பவர் நடித்து வருகிறார். இப்போது நடிகை ரோஷினியின் இழப்பை ரசிகர்களுக்கு ஈடு செய்யும் விதமாக ‘பாரதி கண்ணம்மா’ தொடரை சில ஸ்வாரசியமான கதைக்களத்துடன் நகர்த்தி வருகிறார் இயக்குனர் பிரவீன்.
இதற்கிடையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஸ்வீட்டி இத்தொடரை விட்டு விலக இருப்பதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அதாவது நடிகை ஸ்வீட்டி தற்போது ஜீ தமிழ் டிவியின் ‘சூப்பர் குயீன்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இதனால் நடிகை ஸ்வீட்டி விஜய் டிவியை விட்டு விலக இருப்பதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து நடிகை ஸ்வீட்டி தற்போது ஜீ தமிழ் டிவியின் புதிய சீரியல் ஒன்றில் லீட் ரோலில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம்.
கோலாகலமாக நடக்கும் வருண், சத்யா திருமண வைபோகம் – “மௌன ராகம் 2” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
இதனால் இவர் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அஞ்சலியாக தொடர மாட்டார் என்று தெரிகிறது. இந்த தகவல் தற்போது ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை காவ்யா, நடிகர் அகிலன், ரோஷினி ஆகியோரை தொடர்ந்து தற்போது ஸ்வீட்டியும் இந்த சீரியலை விட்டு விலகுவதாக வெளியான செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது தவிர விஜய் டிவியின் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ நடிகை வைஷ்ணவி, ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ நடிகை தேஜஸ்வினி ஆகியோரை தொடர்ந்து ஸ்வீட்டியும் ஜீ தமிழ் டிவியில் இணையப்போவது கவனிக்கத்தக்கது.