‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை அவன் இவன் படத்தில் செய்த சம்பவம் – ரசிகர்கள் ஷாக்!
தமிழ் சினிமாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான “அவன் இவன்” படத்தில், நடிகர் விஷால் பெண் வேடமிட்ட போது அவருக்கு, பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் செந்தில்குமாரி டப்பிங் கொடுத்திருக்கிறார்.
சீரியல் நடிகை:
அவன் இவன் 2011-ல் வெளிவந்த நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் பாலா இயக்க விஷால், ஆர்யா, ஜனனி ஐயர், ஜிஎம் குமார், மது ஷாலினி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். படத்தினை கல்பாத்தி சகோதரர்கள் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்ததுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஷால் சில காட்சிகளில் பெண் வேடம் அணிந்து இருந்தார். இந்தப் படத்தில் விஷாலுக்கு பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை செந்தில்குமாரி டப்பிங் செய்துள்ளார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
Bigg Boss Tamil Season 5 Today – Promo 2 | தாமரையிடம் சண்டையிடும் நமீதா மாரிமுத்து!
அந்த படத்தில் ஒரு காட்சியில் பெண் போன்ற வேடமணிந்து மகளிர் நிலையத்தில் பணிபுரியக்கூடிய போலீஸ் வீட்டிற்கு திருடனாக சென்றிருப்பார். மேலும் அந்த காட்சியில் நிகழக்கூடிய உரையாடலுக்கு சின்னத்திரையை சேர்ந்த நடிகை செந்தில்குமாரி டப்பிங் கொடுத்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு தேவையான குரல்வளம் கொண்டவர்கள் தான் டப்பிங் செய்ய அழைக்கப்படுவார்கள். கதையில் நடித்து வரும் கதாபாத்திரத்தின் குரலில் இடையூறு இருந்தாலோ அல்லது வேறு சில காரணங்களினாலோ டப்பிங் செய்ய படக்குழுவினர் வேறு ஆட்களை நாடுவார்கள்.
வெண்பாவுடன் சேர்ந்த கண்ணம்மா, சீரியலில் புதிய திருப்பம் – ‘பாரதி கண்ணம்மா’ படப்பிடிப்பு புகைப்படம்!
அதனால் தான் இந்த படத்தில், கிராமத்துப் பெண்ணின் குரலாக நடிகை செந்தில்குமாரின் குரல் ‘அவன் இவன்’ படத்தில் விஷாலுக்கு கச்சிதமாக பொருந்திருக்கும். மேலும் நடிகை செந்தில் குமாரி வெள்ளித்திரையில் களவாணி, கடைக்குட்டி சிங்கம் மற்றும் சுல்தான் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் சின்னத்திரையில் பல சீரியலில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே கனா காணும் காலங்கள் மற்றும் சரவணன் மீனாட்சி ஆகிய ஹிட் சீரியலில் நடித்து புகழ் பெற்றவர். இவர் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் சித்தியாக நடித்து வருகிறார்.