பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கதறி அழுத சம்பவம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உருக்கம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. அந்த வரிசையில் அதிக பார்வையாளர்களை கொண்ட சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தொடர் தான். அதில் நடிக்கும் நடிகை அனைவர் முன்பும் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் மக்கள் மனதை உருக்கி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
மலையாள தொடரின் மறு ஆக்கமாக ஆரம்பமாகி தற்போது விஜய் டிவி சீரியல்களில் ஹிட் கொடுத்து வரும் தொடரின் வரிசையில் பாரதி கண்ணம்மா தொடரும் ஒன்று. சீரியல் தொடங்கிய காலத்தில் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியே சென்ற காட்சிகள் மூலம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வந்தது. அதன் பிறகு சில நாட்கள் அரைத்த மாவையே அரைப்பது போல் கதை ஜவ்வாக இழுத்து.
முல்லை எடுத்த திடீர் முடிவு, கதிருக்கு மீண்டும் திருமணம் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் திருப்பம்!
இதனால் தொடரை விரைவில் எண்டுக்கு கொண்டு வாங்கப்பா என சொல்லி பல விமர்சனங்களையும் தொடர் பெற்று வந்தது. அதை தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே தொடரில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதாவது பாரதி கண்ணம்மாவை சேர்த்து வைக்கும் முயற்சியில் லட்சுமி மற்றும் ஹேமா மேற்கொள்ளும் முயற்சிகள். அத்துடன் மேலும் சீரியலை சுவாரஸ்யப் படுத்துவதற்காக புது புது முகங்கள் என பல மாற்றங்களை கொடுத்துள்ளார் இயக்குனர்.
இவ்வாறு பாரதி, வெண்பாவின் திருமணம் குறித்த நிகழ்வுகள்தான் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டு விஜய் டிவி கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சி நடைபெறும். அவ்விதமாக இந்த ஆண்டும் நடக்க உள்ள நிகழ்ச்சிக்கு முன்னதாக ‘போடுங்கம்மா ஒட்டு எங்க சீரியலை பார்த்து’ என்ற தலைப்பில் வருகிற ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா சீரியலில் அகிலனுக்கு மனைவியாக நடித்து வரும் புதிய அஞ்சலி அனைவர் முன்பும் கதறி அழுத சம்பவம் குறித்த ப்ரோமோ ஒன்று மக்கள் மனதை பிழிந்தது.