முல்லை எடுத்த திடீர் முடிவு, கதிருக்கு மீண்டும் திருமணம் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் திருப்பம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லைக்கு குழந்தை பிறக்காது என்பதை அறிந்து குடும்பமே வருத்தத்தில் இருக்கும் நிலையில் முல்லை கோவிலுக்கு சென்று வேண்டுதல் செய்கிறார். இந்நிலையில் கதிருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய முல்லை முடிவு செய்கிறார். அதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
குடும்பக் கதைகளுடன் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அண்ணன் தம்பிகளின் பாச போராட்டத்தை பற்றியும் குடும்பத்தில் அனைவரும் பல மனக்கசப்புகளை தாண்டி எப்படி ஒற்றுமையாக இருக்கின்றனர் என்பது பற்றியும், குடும்பத்தில் வரும் நல்லது கேட்டது பற்றியும் கதையில் காட்டப்பட்டு வருகிறது. சென்ற வார எபிசோடு முழுவதும் முல்லைக்கு குழந்தை பிறக்காது என்ற உண்மை தெரிய வர குடும்பமே வருத்தத்தில் இருக்கின்றனர்.
தூக்கு மாட்டிக் கொண்ட “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆனால் முல்லைக்கு டிரீட்மென்ட் மூலமாக குழந்தை பிறக்க வைக்கலாம் என அனைவரும் முடிவு செய்கின்றனர். அதற்கு நிறைய செலவாகும் என்பதால் மீனாவிற்கு அது பிடிக்காமல் இருக்கிறது. அதனால் மீனா முல்லைக்கு இப்போதைக்கு டிரீட்மென்ட் வேண்டாம் என சொல்ல யாரும் அதை கேட்காமல் இருக்கிறார். முல்லைக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதால் புது வீடு கட்ட இருக்கும் திட்டத்தையும் கைவிடுகின்றனர். முல்லை அதனால் டிரீட்மென்ட் வேண்டாம் என நினைக்கிறார்.
முல்லை கதிர் நிலைமையை நினைத்து மிகவும் கஷ்டப்படுகிறார். தன்னுடைய பிரச்சனையால் கதிர் மிகவும் கஷ்டப்படுவதை நினைத்து வருத்தப்படுகிறார். இப்படி கதை சென்று கொண்டிருக்கும் நிலையில் முல்லை மிகப்பெரிய முடிவு ஒன்றை எடுக்க இருக்கிறார். அதாவது முல்லை கதிருக்கு வேற பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். திருமண மேடையில் கதிர் வேற பெண்ணுடன் இருக்க முல்லை அதை பார்க்க முடியாமல் கதறி அழுகிறார். அது குறித்த எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.