பாரதி கண்ணம்மா சீரியலில் புதிய ட்விஸ்ட் – வெண்பாவின் வில்லத்தனமும், ரசிகர்களின் கொந்தளிப்பும்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நாளுக்கு நாள் பல ட்விஸ்ட்டான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது வில்லி வெண்பா அனைத்துக்கும் ஒரு படி மேலே போய் ஒரு காரியம் செய்துள்ளார்.
வில்லி வெண்பா
விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பி பார்ப்பது பாரதி கண்ணம்மா சீரியலை தான். இதில் முக்கிய பங்கு வகிப்பது வில்லி வெண்பாவிற்கு தான். கதாநாயகன் பாரதியை தனது கல்லூரி காலம் முதல் வெண்பா காதலித்து வருகிறார். அவரை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். ஆனால், பாரதி கண்ணம்மாவை திருமணம் செய்து கொள்கிறார்.
சமந்தா, நாக சைதன்யா இடையே உறுதியான விவாகரத்து? பிரபல நடிகர் பார்ட்டியில் சமந்தா மிஸ்ஸிங்!
இதனை பொறுக்காத வெண்பா பல விதங்களில் இருவரையும் பிரிக்க திட்டமிட்டு கண்ணம்மா மேல் பாரதிக்கு சந்தேகம் வரும்படி செய்து விடுகிறார். இதனால் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் 8 ஆண்டுகள் வரை பிரிந்து விடுகின்றனர். கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்து விடுகிறது. ஒரு குழந்தை பாரதியிடமும் மற்றொரு குழந்தை கண்ணம்மாவிடமும் வளர்கிறது. இப்படியாக இருக்க, தனது இன்னொரு குழந்தை பற்றி தெரிந்து கொள்கிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு மொத்தமாக விலகும் வெண்பா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதனை தெரிந்து கொள்ளும் வெண்பா பாரதியை டிவோர்ஸ் செய்து கொண்டால் தான் குழந்தை பற்றிய உண்மையை கூறுவேன் என்று கூறிவிடுகிறார். இந்நிலையில் வெண்பா உச்சகட்டமாக அஞ்சலியை கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விடுகிறார். அதற்காக அதிகளவு டோஸேஜ் கொண்ட மாத்திரைகளை உட்கொள்ள சொல்லுகிறார். சரி என்று ஒப்புக்கொண்டு விட்டு அஞ்சலியும் சாப்பிட போகிறார். ஆனால், அப்போது சரியாய் வந்து சௌந்தர்யா அவரை தடுத்து விடுகிறார். நாளுக்கு நாள் வெண்பாவின் வில்லத்தனம் அதிகரித்து வருவதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
Not a worth serial to watch… There is only vengence hatred negativity…. There is a lot in human life but these cheap rated serials show nothing…. I have stopped watching this serial..