சமந்தா, நாக சைதன்யா இடையே உறுதியான விவாகரத்து? பிரபல நடிகர் பார்ட்டியில் சமந்தா மிஸ்ஸிங்!
திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக இருக்கும் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரது பிரிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது குடும்பத்தினர் அனைவரும் பங்கு கொண்ட ஒரு விருந்தில் நடிகை சமந்தா பங்கேற்காதது மேலும் இந்த செய்தியினை உறுதிபடுத்தியுள்ளது.
நாக சைதன்யா – சமந்தா தம்பதி
திரையில் ஒன்றாக நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் பலரும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு ஒன்று போல கருத்துக்கள் கொண்டு திருமணம் செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பல நடிகர் மற்றும் நடிகைகள் அந்த காலம் முதல் இன்று வரை இருக்கின்றனர். அந்த வகையில் கடந்த 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா. இருவரும் ‘விண்ணை தாண்டி வருவாயோ’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேகில் நடிக்கும் போது காதல் வயப்பட்டு தங்களது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
கர்ப்பத்துடன் கண்ணம்மாவின் ‘WORLD TOUR’ இதே நாளில் அன்று – ‘பாரதி கண்ணம்மா’ ட்ரெண்டிங்!
திருமணம் முடிந்தும் கூட நடிகை சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். முன்பை விட படு கிளாமராக நடித்தார் என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் இருவரும் விவாகரத்து செய்ய இருக்கின்றனர் என்ற செய்திகள் அதிகளவில் வெளி வந்தது. சமந்தா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தின் பெயரை மாற்றியது, தனது ஆண் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தினை பதிவேற்றியது, நாக சைதன்யா சமந்தாவுடன் அல்லாமல் தனது தந்தையுடன் தங்கியது என்று பல விஷயங்கள் இதனை உறுதி செய்தது.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு மொத்தமாக விலகும் வெண்பா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தற்போது இதனை மேலும் உறுதி செய்யும் வகையில் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. நாக சைதன்யாவின் புதிய திரைப்படமான ‘லவ் ஸ்டோரி’ திரைப்படத்தின் நிகழ்ச்சியில் நடிகர் அமீர் கான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். அவருக்கு ஹைராபாத்தில் உள்ள பெரிய ஹோட்டல் ஒன்றில் நாகசைதன்யா விருந்து கொடுத்தார். இதில் நடிகர் நாக அர்ஜுனா, அவரது மனைவி அமலா, அகில் என்று அனைவரும் பங்கேற்று இருந்தனர். ஆனால், இதில் நாக சைதன்யாவின் மனைவியான சமந்தா பங்கேற்கவில்லை. இதனால் இருவரது விவாகரத்து மேலும் உறுதியாகி உள்ளது.