‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு மொத்தமாக விலகும் வெண்பா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது பல முக்கியமான கட்டம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வில்லியாக நடிக்கும் வெண்பா இனி சீரியலில் தொடருவாரா? என்பது குறித்த ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் அனைத்து வாரமும் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் எப்போதும் இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல் தான். இந்த சீரியல் தெலுங்கு சீரியலான ‘கார்த்திகை தீபம்’ என்ற சீரியலின் ரீமேக் தான் ஆகும். இன்னும் இந்த சீரியலில் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமல் இருந்து வருகின்றனர். இதனால் ரசிகர்கள் எப்போது அந்த சீன் வரும் என்று ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது சௌந்தர்யா கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது என்றும் அதில் ஒரு குழந்தையை தொலைத்து விட்டது என்று பாரதியிடம் கூறுகிறார்.
விஜய் டிவி ‘பிக் பாஸ் 5’ கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் – முழு பட்டியல் ரிலீஸ்!
இப்படி பல விறுவிறுப்பான கட்டங்களுடன் இந்த சீரியலில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை பரினா. இவர் இந்த சீரியலின் வில்லி கதாபாத்திரமான வெண்பா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இவரை வைத்து தான் கதையே நகர்ந்து வருகிறது என்று கூற வேண்டும். இப்படி ஊரு புறம் இருந்தாலும் நடிகை பரினா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இருந்தும் கூட சீரியலில் நடித்து வருகிறார்.
கர்ப்பத்துடன் கண்ணம்மாவின் ‘WORLD TOUR’ இதே நாளில் அன்று – ‘பாரதி கண்ணம்மா’ ட்ரெண்டிங்!
இதனை அவரது ரசிகர்கள் பாராட்டி வந்தாலும், உடல் நலனில் அக்கறை கொள்ள அவரை அறிவுறுத்தி வருகின்றனர். இன்னும் சிறிது நாட்களில் அவருக்கு குழந்தை பிறந்து விடும். தற்போது இவர் நடித்து வந்தாலும், குழந்தை பிறந்ததும் நடிக்க இருப்பது கஷ்டம் தான். குழந்தையை பார்த்து கொள்ள வேண்டும், அவரது உடல் நலனையும் பார்த்து கொள்ள வேண்டிய சுழல் ஏற்படும். இதனால் நடிகை பரினா சீரியலை விட்டு விலக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் கதை சௌந்தர்யா, பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோரை வைத்தே சிறிது நாட்கள் காட்சிகள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.