நாட்டில் பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெற தடை விதிப்பு – அரசு அதிரடி உத்தரவு!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி அமைந்த பிறகு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்குவதை தாலிபான் அரசு நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓட்டுநர் உரிமம்:
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் தாலிபான் அமைப்பினர் ஆட்சி செய்து வந்தனர். ஆப்கானிஸ்தான் மக்களை தொடர்ந்து கடுமையான விதிமுறைகளை செலுத்தி மக்களை துன்புறுத்தி கொண்டிருக்கின்றனர். தாலிபான் மூத்த தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசும் அமைக்கப்பட்டு ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன.
முழு ஊரடங்கில் இரண்டு மணிநேரம் தளர்வு, 211 பேர் கைது – காவல்துறை நடவடிக்கை!
தாலிபான்களின் ஆட்சி முறையில் பயங்கரமான விதிமுறைகள் புகுத்தியதன் காரணமாக மக்கள் பயந்து, ஏராளமானோர் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு தப்பித்து சென்றனர். அப்போதும் தாலிபான்கள் விடாது உள்ளூர் விமானங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு தப்பி பல்வேறு நாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். இதற்கு பிறகு தாலிபான்கள் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் எனவும், கடந்த முறை போல் அல்லாமல் சம உரிமையுடன் ஆட்சி நடைபெறும் எனவும் தாலிபான் அமைப்பினர் தெரிவித்தனர்.
Exams Daily Mobile App Download
இதற்கு பிறகு ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல கூடாது எனவும், கல்லூரிகளுக்கு செல்ல கூடாது எனவும், தனியாக வெளியே செல்ல கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும், மாணவர்களுடன் பெண்கள் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்க கூடாது எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளுக்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தற்போது பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்குவதை தாலிபான் அரசு நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.