முழு ஊரடங்கில் இரண்டு மணிநேரம் தளர்வு, 211 பேர் கைது – காவல்துறை நடவடிக்கை!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரம்ஜான் பண்டிகையின்போது கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது, இருப்பினும் இன்று மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு இரண்டு மணி நேரம் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
இரண்டு மணி நேரம் தளர்வு:
கடந்த திங்கட்கிழமை இரவு நகரின் ஜலோரி கேட் பகுதியில் ஈத் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக மதக் கொடிகள் மீது வன்முறை வெடித்தது. இதையடுத்து, ஜோத்பூர் பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து நடந்த கல்வீச்சு தாக்குதலில் 5 போலீசார் காயமடைந்தனர். சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவியதன் எதிரொலியாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோத்பூர் மாவட்டம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஓய்வூதியத் தொகை ரூ.1.25 லட்சம் வரை உயர்வு!
தொடர்ந்து ஜோத்பூரின் உதய் மந்திர், நகோரி கேட், கந்தா பல்சா, பிரதாப் நகர், தேவ் நகர், சூர் சகர் மற்றும் சர்தர்புரா ஆகிய போலீஸ் நிலைய கட்டுப்பாட்டு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை இன்று வரை (மே 6) நீட்டித்து மாவட்ட காவல் ஆணையாளர் உத்தரவிட்டார். இருப்பினும் தேர்வுக்கு செல்ல கூடிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் ஊரடங்கில் இருந்து விலக்களிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று மருத்துவ சேவை, வங்கி அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் ஊடக பணியாளர்களுக்கு விலக்களிக்கப்பட்டு உள்ளது. இன்டர்நெட் சேவை தொடர்ந்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்து மொபைல் இன்டர்நெட் சேவை மீண்டும் வழங்குவது பற்றி முடிவு செய்யப்படும் என ஜோத்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் ஹிமான்ஷூ குப்தா தெரிவித்துள்ளார். வன்முறையை அடுத்து இதுவரை 211 பேர் வரை கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் எம்.எல்.லாதர் தெரிவித்தார். தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருந்தாலும் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது. இன்று காலை 8 மணி முதல் இரண்டு மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டு ஜோத்பூர் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க அனுமதிக்கப்பட்டனர். ராஜஸ்தானில் கடந்த ஒரு மாதமாக தொடர் வகுப்புவாத மோதல்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.