தபால் ஓட்டு போட போறீங்களா? அப்போ இந்த அப்டேட் தெரிஞ்சுக்கோங்க!

0
தபால் ஓட்டு போட போறீங்களா? அப்போ இந்த அப்டேட் தெரிஞ்சுக்கோங்க!

தபால் ஓட்டு போடுபவர்கள் இனி தபால் ஓட்டுகளை அனுப்ப முடியாது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

தபால் ஓட்டு:

தமிழகத்தில் 2024ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஆனது தெரிவித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஓட்டு அளிக்க, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை இந்த தபால் ஓட்டு ஆனது தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பயிற்சி வகுப்பின் போது வழங்கப்படும். பிறகு இவர்கள் பயிற்சி நிறைவு நாளின் போது, பயிற்சி மையங்களில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப் பெட்டிகள் அல்லது தேர்தலை நடத்துபவர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஓட்டு பெட்டிகளில் ஓட்டுகளை செலுத்துவர்.

உள்துறை அமைச்சக ஜெனரல் வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு நீட்டிப்பு!

தற்போது இந்த நடைமுறையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. தபால் ஓட்டு அளிப்பவர்கள் மாவட்ட கலெக்டர்கள் தெரிவிக்கும் மையங்களில், ஓட்டுப்பதிவுக்கு முன்னதாக நேரடியாக சென்று ஓட்டு போட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தவிர கடல் வணிகம் செய்பவர்கள், பி.எஸ்.என்.எல்., சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள், மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சக ஊழியர்கள், இந்திய உணவு கழக தென்மண்டல அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோர், தபால் ஓட்டளிக்க தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!