அரசு அதிகாரிகள் புதிய கார்கள் வாங்க தடை – நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தான்!

0
அரசு அதிகாரிகள் புதிய கார்கள் வாங்க தடை - நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தான்!
அரசு அதிகாரிகள் புதிய கார்கள் வாங்க தடை - நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தான்!
அரசு அதிகாரிகள் புதிய கார்கள் வாங்க தடை – நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தான்!

உலகம் முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. அந்த வகையில் பாகிஸ்தான் இன்னும் நிதி நெருக்கடியில் மீண்டும் வராமல் உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது அந்நாட்டு அரசாங்கம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிதி நெருக்கடி

உலகம் முழுவதும் தற்போது பணவீக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டு வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் இன்னும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்துடன் அமெரிக்கா டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 200ஐ தாண்டியுள்ளது என்பது எந்த அளவுக்கு பாகிஸ்தான் பொருளாதார நிலை உள்ளது என்பதை குறிக்கிறது. மேலும் குறைந்து வரும் அன்னிய செலாவணி கையிருப்பு, அதிகரித்து வரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன் உள்ளிட்ட சிக்கல்களை எதிர் கொண்டு வருகிறது.

இந்தியாவில் ஒரே நாளில் 8,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!

இதனை தொடர்ந்து எரிபொருள் இல்லாமல் பல மின்சார உற்பத்தி நிலையம் மூடப்பட்டுள்ளது. அதனால் நாட்டில் மின்சாரக் கட்டணம், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட விலையை அதிரடியாக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது நாட்டில் நிதி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து நாட்டின் 2022- 23 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாகிஸ்தான் நிதி மந்திரி மிப்தா இஸ்மாயில் வெளியிட்டுள்ளார். இதில் கூறியிருப்பதாவது, நாட்டில் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

மேலும் இதில், நாட்டில் நிதி நெருக்கடி நிலை மிகவும் மோசமாக உள்ளதால் வரி வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பணக்காரர்கள் மீதான வரிகளை அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசு அதிகாரிகள் புதிய கார்களை வாங்க கூடாது என்றும் புதிய கார்களை வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் நிதி நெருக்கடியை சமாளிக்க இது போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் நிதி நிலை சீராகும் போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!