இந்தியாவில் ஒரே நாளில் 8,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!

0
இந்தியாவில் ஒரே நாளில் 8,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!
இந்தியாவில் ஒரே நாளில் 8,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!
இந்தியாவில் ஒரே நாளில் 8,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கொரோனா பரவல்:

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த கொரோனா வைரஸ் தொற்று மேலும் உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் வைரஸ் வேகமெடுக்க தொடங்கியது. மத்திய சுகாதாரத்துறை வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசுக்கு அறிவுரைகளை வழங்கியது. இதன் அடிப்படையில் ஊரடங்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனாலும் தொற்று பரவல் குறையவில்லை. முதல் அலையை விட இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடியது.

தலைநகரில் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – வன்முறை எதிரொலி! அரசு அதிரடி நடவடிக்கை!

இந்த வைரஸால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து இந்த கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஓமிக்ரான் வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது. இதிலிருந்தும் மக்கள் மீண்டு வரும் வேளையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 8,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,13,435 ஆக அதிகரித்துள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 40,370 ஆக உள்ளது. தற்போது சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.09 சதவிகிதமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 10 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் 98.69 ஆக உள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் 4,216 போ் குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.69 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 1,94.92,71,111 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!