ராதிகாவிற்காக பாக்கியா தொழிலை தொடங்க சொல்லும் கோபி, சந்தேகத்தில் செல்வி – “பாக்கியலட்சுமி” சீரியலில் நாளை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவை கோபி தொழில் செய்ய வேண்டாம் என சொன்னதை அடுத்து ராதிகாவிடம் பாக்கியா சொல்லி வருத்தப்படுகிறார். இந்நிலையில் ராதிகா பாக்கியாவின் கணவரிடம் பேச சொல்லி கோபியை அனுப்புகிறார். அதன் பின் கோபி வேறு வழி இல்லாமல் பாக்கியாவை தொழில் செய்ய சம்மதிக்கிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா தொழில் செய்வதில் பெரிய பிரச்சனை வர அதில் பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என நிரூபித்து பாக்கியாவை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வருகிறார். பாக்கியா மீது தவறு இல்லாமல் இருந்தாலும் அவருடைய வாடிக்கையாளர்கள் பாக்கியாவை நம்பவில்லை. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பாக்கியா இனிமேல் தொழில் செய்ய கூடாது என கோபி மிரட்டுகிறார். பாக்கியா கோபி சொன்னதால் தொழிலை கை விடுகிறார்.
கோபியுடன் பாக்கியா வீட்டுக்கு செல்லும் ராதிகா? சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ட்விஸ்ட்!
இது பற்றி ராதிகாவிடம் பேசி வருத்தப்பட ராதிகாவுக்கு குற்ற உணர்ச்சி வருகிறது. அதனால் கோபியிடம் சொல்லி பாக்கியாவின் கணவரிடம் பேசலாம் என சொல்கிறார். கோபி மாட்டிக் கொண்டோம் என நினைத்து பதட்டம் அடைய பின் நானே சென்று அவர் கணவரிடம் பேசுகிறேன் என கிளம்புகிறார். அவருடைய வீட்டிற்கு அவரே போக ராதிகா போன் செய்து சரியான முகவரிக்கு போனீங்களா என கேட்கிறார். பின் கோபி போட்டோ அனுப்பி நான் வந்துட்டேன் கவலைப்படாமல் இரு என சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
பின் வீட்டிற்கு சென்ற கோபி நேராக பாக்கியாவிடம் சென்று நான் நன்றாக யோசித்து பார்த்தேன் நீ மீண்டும் தொழில் செய்யலால் என சொல்கிறார். அதை கேட்டு பாக்கியாவிற்கு ஒரு பக்கம் அதிர்ச்சி இருந்தாலும் மறுபக்கம் சந்தோசமாக இருக்கிறது. ஆனால் செல்விக்கு கோபி மீது சந்தேகம் இருக்கிறது. இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என அவரிடம் கேளு என சொல்ல ஆனால் பாக்கியா அவரை சும்மா இருக்க சொல்கிறார். இனி வரும் எபிசோடுகளில் பாக்கியா புது பொலிவுடன் தன்னுடைய தொழிலை தொடங்க இருக்கிறார்.