கோபியுடன் பாக்கியா வீட்டுக்கு செல்லும் ராதிகா? சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ட்விஸ்ட்!
ஒவ்வொரு நாளும் புது புது எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இன்றைய எபிசோடில் கோபி என்ன காரணங்கள் சொல்லி ராதிகாவிடம் தப்பிக்க போகிறார்? எதனால் பாக்கியா அழுகிறார்? என்பதையெல்லாம் சுவாரசியம் குறையாமல் இப்பதிவில் பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி:
விஜய் டிவி பாக்கியலட்சுமி தொடரில் சமையல் ஆர்டரால் சிறைக்கு சென்று நிரபராதி என விடுவிக்கப்பட்ட பிறகு சமையல் பிசினஸ்ஸா? குடும்பமா? என்ற குழப்பத்துக்கு மத்தியில் கணவர் கோபி பேச்சை மீறாதவராக பிசினஸை கைவிடுகிறார் பாக்கியா. இதனால் மனமுடைந்து குடும்பத்திடம் இந்த சமையல் பிசினஸ்ஸை கைவிட்டது எனக்கு ஒரு கையே இழந்த மாதிரி இருக்கு என்றெல்லாம் சொல்லி கண் கலங்குகிறார். இது குறித்து ராதிகா வீட்டிற்கு வரும் கோபியிடம், பாக்யாவின் ஹஸ்பண்ட் அவுங்களை பிஸ்னஸ் பண்ண வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க என வருத்தத்துடன் கூறுகிறாள்.
அத நினைக்கிறப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏன்னா தெரிஞ்சோ தெரியாமலோ அவங்களோட பிசினசை நிறுத்த நானும் ஒரு காரணம் ஆகிட்டேன் என சொல்ல கோபி இதை கேட்டு கடுப்பாகிறார். அதனால் ராதிகா சந்தேகத்துடன் கோபியை பார்த்து நீங்க ஏன் டீச்சரை பற்றி எப்போ பேசுனாலும் டென்ஷன் ஆகுறீங்க என கேட்கிறாள். அதை தொடர்ந்து நாம ஏன் டீச்சரோட ஹஸ்பண்டை பார்த்து இத குறித்து பேசக்கூடாது? வாங்க பேசலாம் என ராதிகா சொல்ல, உடனே கோபி அதை தடுத்து நிறுத்த என்னென்னமோ முயற்சி செய்கிறார்.
ஆனால் ராதிகா உறுதியாக இருப்பதால் வேறு வழியில்லாமல் கோபி சரி நான் மட்டும் போய் பேசிட்டு வரேன் என கூறுகிறார். அதற்க்கு ராதிகா நானும் வரேன் என சொல்கிறாள். அவரும் அதை ஒரு வழியாக சமாளித்து பாக்கியா வீட்டு முகவரியை வாங்கி அந்த இடத்தை விட்டு நகர்கிறார். முகவரியை பார்க்கும் கோபி என் வீட்டு அட்ரெஸ்ஸை எனக்கே குடுக்குறா என மனதுக்குள் நினைத்துக்கொண்டு நடக்கிறார். இந்த பக்கம் ஜானு, எழில் மீது உள்ள க்ரஷ் பற்றியும், எப்படியாவது இந்த முறை என் காதலை எழிலிடம் சொல்ல போகிறேன் என்பதையும் அமிர்தாவிடம் சொல்கிறாள். இதனால் கடுப்பாகி அமிர்தா அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார்.
Exams Daily Mobile App Download
இதை குறித்து ஜானு, எழிலிடம் சொல்ல அவனோ நான் அமிர்தாவை தான் காதலிக்கிறேன் என்பதை சொல்கிறான். இதற்கிடையில் ராதிகா, கோபிக்கு போன் பண்ணி டீச்சர் வீட்டுக்கு போயிட்டீங்களா? பேசிட்டீங்களா? என கேட்கிறாள். அதற்க்கு கோபியும் பாக்யா கணவரிடம் பேசுவதை போல் நடித்து இரண்டு குரலில் மிமிக்ரி செய்து ஏமாற்றுகிறான். அத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.