விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஜீ தமிழில் கமிட்டான செழியன்!
பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமான ஆர்யன் தற்போது ஜீ தொலைக்காட்சியில் புதிதாக அறிமுகமாக உள்ள தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்யன்:
விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் நன்மதிப்பை பெற்று வருகிறது. இதிலும் குறிப்பாக குடும்ப பெண்களின் வாழ்க்கை கதையை தத்ரூபமாக காட்டி வரும் பாக்யலட்சுமி சீரியல் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. தன்னை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டிருக்கும் பாக்யாவை விட்டு விட்டு கோபி தனது நெருங்கிய தோழியான ராதிகாவை காதலித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார்.
அப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்யன் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினார். அதாவது ஆர்யன் ஜீ தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலின் கதாநாயகியான பார்வதிக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ஆரியன் சீரியலில் இருந்து விலகிக்கொண்டார் இவருக்கு பதிலாக விகாஸ் என்கிற நடிகரின் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
பின்பு திருமணம் முடித்த கையோடு பாண்டிச்சேரியில் உள்ள குடிசை ஒன்றில் எளிமையாக தங்களது ஹனிமூன்னை கொண்டாடினர். பின்பு இவர்களுக்குள் ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய போவதாக பல வதந்திகள் பரவ கொண்டே இருந்தனர். இருவரின் தரப்பில் இருந்தும் எதுவும் தெரிவிக்க காரணத்தினால் இருவரும் பிரிய தான் போகிறார்கள் என்ற வதந்தி மேலும் மேலும் பரவ தொடங்கியது. ஆரியன் சீரியலில் இருந்து விலகிய பிறகு ஆர்யன் குறித்தான எந்த தகவலும் கிடைக்கவில்லை. தற்போது ஜீ தொலைக்காட்சியில் புதிதாக அறிமுகமாக உள்ள தொடரில் ஆரியன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இன்னும் அந்த சீரியல் குறித்தான எந்த அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.