கோபி ஏமாற்றுவதை கண்டுபிடித்த பாக்கியா – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபியின் உண்மையான முகம் பாக்கியாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது. இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளில் என்ன நடக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் வர இருக்கிறது. பாக்கியாவிற்கு கோபி மீது சிறிது சந்தேகம் வந்துள்ளது. ஆனால் அதை எல்லாம் கோபி மீது வைத்திருக்கும் நம்பிக்கையால் பாக்கியா கண்டுகொள்ளாமல் இருக்கிறார். ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் பாக்கியா செய்யும் வேலைகளை பார்த்து வருத்தப்படுகிறார். இப்படி குடும்பத்திற்காக உழைக்கும் பெண்ணை விட்டுவிட்டு கோபி இப்படி செய்கிறானே என நினைத்து ராமமூர்த்தி வருத்தப்படுகிறார். மறுபக்கம் கோபி ராதிகா உடன் நெருக்கமாகி வருகிறார்.
தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பட்ஜெட்டில் ரூ.19 கோடி ஒதுக்கீடு!
இன்றைய எபிசோடில் பாக்கியாவின் வேலைக்கு ஈஸ்வரி உதவி செய்கிறார். மறுபக்கம் மயூரா கோபியை இங்கேயே தங்க சொல்கிறார். கோபியும் சரி என சொல்கிறார். பாக்கியா கோபிக்கு உடம்பு சரி இல்லாமல் இருப்பதால் என்ன செய்கிறார் என தெரியாமல் பதட்டத்துடன் வருகிறார். இனியாவிடம் அப்பா என்ன செய்கிறார் எதாவது சாப்பிட்டாரா என கேட்க, இனியா அப்பா வெளியே சென்றுவிட்டதாக சொல்கிறார். அதனால் பாக்கியா குழப்பத்தில் இருக்கிறார்.
இரவெல்லாம் காத்திருக்க கோபி வரவே இல்லை. கோபிக்கு போன் செய்ய ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் இரவெல்லாம் காத்திருந்து பாக்கியா தூங்கிவிடுகிறார். காலையில் கோபி வர பாக்கியா மீது கோவமாக நேராக அடுப்படி சென்று தண்ணீ குடிக்கிறார். கோபி உடல் நிலை சரியாகிவிட்டதா என பாக்கியா கேட்க அவர் பின்னால் செல்ல அப்போது கோபி முதுகில் லிப்ஸ்டிக் கரை இருப்பதை பார்த்து பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.