‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியின் உண்மை முகத்தை தெரிந்து கொண்ட ஜெனி – இன்றைய எபிசோடு!

0
'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபியின் உண்மை முகத்தை தெரிந்து கொண்ட ஜெனி - இன்றைய எபிசோடு!
'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபியின் உண்மை முகத்தை தெரிந்து கொண்ட ஜெனி - இன்றைய எபிசோடு!
‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியின் உண்மை முகத்தை தெரிந்து கொண்ட ஜெனி – இன்றைய எபிசோடு!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில், பார்ப்பதற்கு பக்கா ஜென்டில் மேன் போல காட்சியளிக்கும் கோபி வீட்டு செலவுக்கு கணக்கு பார்ப்பது போல வெளியாக இருக்கும் இன்றைய எபிசோடுக்கான கதைக்களம் ரசிகர்களிடையே விமர்சனங்களை பெற்று வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் தற்போதைய கதைக்களம் பல்வேறு பாசப்போராட்டங்களுடன் அரங்கேறி வருகிறது. அதாவது இந்த சீரியலில் திருமணமாகி 3 பிள்ளைகளுக்கு அப்பாவாக இருக்கும் கோபி, தனது பாலிய கால காதலியை மணமுடிக்க திட்டமிட்டு வருகிறார். இதற்கிடையில் கோபியின் இந்த வேண்டாத வேலைகளையெல்லாம் கண்டு பிடிக்கும் அப்பா ராமமூர்த்தி அதனை தடுக்க முயற்சிக்கும் வேளையில், படியில் இருந்து கீழே விழுந்து வாய் பேச முடியாமல் போகிறார்.

விஜய் டிவி பிரபலங்களின் திருமண நிகழ்வுகளை நினைவு கூறும் ‘நம்ம வீட்டு கல்யாணம்’ – ப்ரோமோ ரிலீஸ்!

இப்போது ராமமூர்த்தி எப்படியாவது சரியாகி விட வேண்டும் என்று பாக்கியா உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் அவரை விழுந்து விழுந்த கவனித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக எழில், தாத்தாவை குளிப்பாட்டுவது, வெளியே கூட்டி செல்வது என அவருக்கான சேவைகளை முழு மனதோடு செய்து வருகிறார். அதே போல பாக்கியாவும், ஜெனியும் சேர்ந்து தங்கள் பங்கிற்கு சாப்பாடு ஊட்டுவது போன்ற சில சேவைகளை செய்கின்றனர். இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் கோபி மற்றும் செழியனின் சில நடவடிக்கைகள் பார்ப்பவர்களை சற்று முகம் சுளிக்க வைத்துள்ளது. அதாவது, தாத்தாவின் மருத்துவ செலவுக்கு 2 லட்சத்திற்கு மேல் செலவு செய்திருப்பதாக அவ்வப்போது பாக்கியாவிடம் கோபி சொல்லி காட்டி வரும் நிலையில், செழியனும் தாத்தாவுக்கு செலவு செய்ய முடியாது, அதை அப்பா பார்த்து கொள்ளட்டும் என்று பேசுகிறார். இப்படி இருக்க ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இன்றைய கதைக்களத்தில் குடும்ப செலவுகள் பற்றிய பெரிய போராட்டமே நடந்திருக்கிறது.

நிறைமாத கர்ப்பத்தோடு ‘ராஜா ராணி 2’ ஆல்யா மனசா சீரியலில் இருந்து விலகல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அதாவது, வீட்டு செலவுக்கு பணம் போதவில்லை என்று பாக்கியா, கோபியிடம் கேட்டிருக்க அந்த பணத்தை கொண்டு வந்து கொடுக்கும் கோபி இனிமேல் பணம் கேட்க வேண்டாம். இவ்வளவு தான் என்னால் தர முடியும் என்று பாக்கியாவிடம் கண்டிப்பாக சொல்லி விடுகிறார். இதனை கேட்டுக்கொண்டிருக்கும் செல்வி, அக்கா இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். ஆனால் கோபி சார் எப்போதும் இப்படி தான் என்று ஜெனியிடம் கூறி வருத்தப்படுகிறார். இப்போது செழியனும் பண விஷயத்தில் கோபியை போலவே இருப்பதை நினைத்து ஜெனி வருத்தப்படுவது போல வெளியாகி இருக்கும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!