‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடக்கப்போகும் கோபி & ராதிகா திருமணம் – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவியன் பாக்கியலட்சுமி சீரியலில் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில், இதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
புதிய திருப்பம்:
பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே அதிக விறுவிறுப்புடன் சென்று வருகின்றது. இதனால் பாக்கியலட்சுமி சீரியலின் ரசிகர்கள் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர். ஒரு பக்கம் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது இந்த சீரியல். குடும்பத்தை காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள பாக்கியாவின் கணவர் கோபி, தனது தோழி ஒருவருடன் பழகி வருகிறார். இதனால் சமூக பொறுப்பில்லாமல் சீரியல் சென்று வருவதாக கூறப்படுகிறது.
போதையில் மீனாவிடம் உளறும் ஜீவா, உண்மையை தெரிந்து கொள்ளும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இந்த வாரம்!
இந்நிலையில், கோபி செய்து வரும் செயல்கள் அனைத்தும் தெரிந்து அவரை கண்டிக்க வரும் போது கோபியின் அப்பா ராமமூர்த்தி எதிர்பாராத விதமாக மாடிப்படியில் இருந்து விழுந்து பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார். இதனால் அவரால் எதையும் பேச முடியவில்லை. இந்த சூழ்நிலையிலும், கோபி பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி விடுகிறார். இதனால் முதலில் சற்று குற்ற உணர்ச்சியாக இருந்தாலும், அதன் பின்னர் மறந்து விடுகிறார்.
மீண்டும் இணைந்த “பாரதி & கண்ணம்மா” – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!
இருவரின் விவாகரத்து பத்திரத்தையும் வக்கீல் கேட்பதாக கூறி அதை கேட்டு வாங்கி கொள்ளும் போது தான் கோபியின் மனைவியின் பெயர் பாக்கியா என்பது தெரியவருகிறது. ஆனால் அது எதேர்சையானது என்று ராதிகா நினைக்கிறார். இந்நிலையில், ராதிகாவின் அம்மா இவர்களின் திருமணத்தை அவசரப்படுகிறார். இதனால் கோபி மற்றும் ராதிகாவின் திருமணம் நடக்க இருப்பது போல் ப்ரோமோக்கள் தற்போது வெளியாகியுள்ளது.