மாநிலம் முழுவதும் இரவுநேர முழு ஊரடங்கு உத்தரவு? அரசு விளக்கம்!
மத்திய பிரதேச மாநிலத்தின் தற்போதைய கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை ஆய்வு செய்த அரசு விரைவில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகளை திருப்ப பெறுவதாக தெரிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
இரவு ஊரடங்கு
நாடு முழுவதும் கொரோனா 3ம் அலைத்தொற்று தீவிரமடைந்து வந்த போது, பல்வேறு மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, டெல்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் வார இறுதி போன்ற ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, தற்போது பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும், அலுவலகங்களும் வழக்கம் போல செயல்பட துவங்கி இருக்கிறது.
அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம் முழுவதும் கடந்த சில வாரங்களாக அமலில் இருந்து வரும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவில் வாபஸ் பெறப்படும் என்று உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தகவல் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது, மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்து வருவதை அடுத்து அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கிய பின்னர், இரவு ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெறுவதற்கான முன்மொழிவு பரிசீலனையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு? அரசின் முடிவு என்ன? ஒமிக்ரான் எதிரொலி!
இதனுடன் கொரோனா மறுஆய்வு கூட்டத்திற்குப் பிறகு இது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அந்த வகையில் ஊரடங்கு நீக்கப்படும் என்று சூசகமாக குறிப்பிட்ட அவர் அதற்கான காலத்தை தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் மத்திய பிரதேசத்தில் பிப்ரவரி 25 முதல் சினிமா திரையரங்குகளை திறப்பதற்கும், திருமணங்களில் கலந்து கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கவும் அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.