இன்னும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு? அரசின் முடிவு என்ன? ஒமிக்ரான் எதிரொலி!
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு சமூகத்தை சேர்ந்த 2 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த நகரம் முழுவதும் மீண்டுமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் தொற்று புதிய பாதிப்புகளை பதிவு செய்து வரும் நிலையில், ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதமான சூழல் நிலவுகிறது. அந்த வகையில் சீனா, ஹாங்காங் போன்ற பகுதிகளில் ஒமிக்ரான் வைரஸின் ஆதிக்கம் அதிகளவு பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஒமிக்ரான் வைரசை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா தொடர்பான தடைகள் முற்றிலும் நீக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? வெளியான பரபரப்பு தகவல்!
இதற்கிடையில் மேற்கு ஆஸ்திரேலியாவின் கல்கூர்லி-போல்டருக்கு வடகிழக்கில் சுமார் 1,000 கிமீ தொலைவில் உள்ள மந்தமாரு சமூகத்தில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்நகரம் மீண்டும் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர். அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 5 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் அனைவரும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கம் – பிரதமர் முக்கிய அறிவிப்பு!
என்றாலும் அந்த நகரத்தை சேர்ந்த மற்றவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்று கருதப்பட்டு வருகிறது. இதனால் ஆஸ்திரேலியாவில் மீண்டும் கொரோனா தொடர்புடைய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்போது மேற்கு ஆஸ்திரேலியாவில் சுமார் 230 தொலைதூர பழங்குடியின சமூகங்கள் உள்ளன. இவர்களிடையே குறைந்த தடுப்பூசி விகிதங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், கொரோனா பரவும் அபாயம் அதிகளவு இருப்பதாகவும் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.