ராதிகாவுடன் கோபிக்கு திருமணம், பாக்கியாவிற்கு புது ஜோடி – சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்!
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியா மற்றும் கோபிக்கு விவாகரத்து நடக்கப்போகும் காட்சிகள் தான் இனி சிறிது நாட்களில் வர உள்ள நிலையில், பாக்கியாவிற்கு புது ஜோடி ஒருவர் சீரியலில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்த திருப்பங்கள்:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள போவதற்காக பாக்கியாவிற்கு தெரியாமல் விவாகரத்து பாத்திரத்தில் கையெழுத்து வாங்கி விடுகிறார். பாக்கியாவும் கோபி மேல் உள்ள நம்பிக்கையின் காரணமாக அது என்ன, ஏது என்று கூட கேட்காமல் அதில்,கையெழுத்து போட்டு கொடுக்கிறாள். கோபியை பற்றிய உண்மைகள் அனைத்தும் தெரிந்ததால் தான் ராமமூர்த்திக்கு உடல்நிலை மோசமாக ஆனது.
‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பாவின் பதிலால் கடுப்பான ரசிகர்கள் – இவர் இப்படி தான் போல!
இதனால் கோபிக்கு ஒரு புறம் குற்ற உணர்ச்சியாக இருந்தாலும் அதை ராதிகாவிற்காக ஓரம் கட்டி விடுவார். விரைவில் விவகாரத்தி கிடைத்து கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள போகிறார். இதனால் சீரியலில் பெரிய திருப்பங்கள் வர இருக்கிறது. இதனுடன் கூடுதலாக செழியன் ஜெனிக்கு இடையிலான பிரச்சனை, எழில் அம்ரிதாவிற்கான பிரச்சனை, இனியாவின் குட்டி காதல் போன்ற பலவற்றையும் சேர்த்து கதையின் போக்கில் முடிவிற்கு கொண்டு வருவார்கள்.
பாரதியை DNA டெஸ்ட் எடுக்க அழைக்கும் கண்ணம்மா, உண்மை வெளிப்படுமா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
அதன்பிறகு கதை ஒரு வழியாக நேர் பாதைக்கு வந்ததும், புதிதாக ஒரு திருப்பத்தை கொண்டு வர இருக்கிறார்கள். அதாவது பாக்கியாவை சிறு வயதில் ஒரு தலையாக காதலித்து வந்த ஒருவர் கதையில் அறிமுகம் ஆக இருக்கிறார். அவர் இதுவரையில் பாக்கியாவை நினைத்து திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்றும் கதையில் காட்டப்படுகிறது. அவர் பாக்கியாவிற்கு ஆதரவாக இருந்து தேற்றுவார் என்றும், இதனால் பாக்கியாவிற்கு அவர் ஜோடியாக வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.