‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பாவின் பதிலால் கடுப்பான ரசிகர்கள் – இவர் இப்படி தான் போல!
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தமிழக மக்களிடத்தில் அதிக பிரபலமானவர் நடிகை ஃபரீனா. தற்போது இன்ஸ்டாவில் ரசிகரின் கமெண்ட்டிற்கு ஃபரீனா அளித்துள்ள பதிலால், ரசிகர்கள் அனைவரும் தற்போது கோவமடைந்துள்ளனர்.
ஃபரீனாவின் பதில்:
பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர், நடிகையர் நடுவில் பல்வேறு காரணங்களுக்காகவும் மாற்றம் செய்யப்பட்டனர். அவ்வளவு ஏன் கதையின் முக்கிய நாயகியான கண்ணம்மா கூட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் வில்லியாக நடித்து வந்த ஃபரீனா தன் நிஜ வாழ்க்கையில் கர்ப்பமானதை அடுத்து சீரியலில் இருந்து விலகி விடுவாரென்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் தனது பிரசவத்திற்கு சில நாட்கள் முன்பு வரை ஃபரீனா சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார்.
பாரதியை DNA டெஸ்ட் எடுக்க அழைக்கும் கண்ணம்மா, உண்மை வெளிப்படுமா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஃபரீனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களில் அவர் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். இதனால் ஒரு பக்கம் பாராட்டுகளை பெற்றாலும், இன்னொரு புறம் அதற்கான விமர்சனங்களையும் பெற்று வந்தார். இந்த விமர்சனங்கள் எதுவும் அவருக்கு புதிதானது அல்ல. அவர் கர்ப்பமாக இருக்கும் போது நடத்திய வித்தியாசமான போட்டோஷூட்களின் போது கூட இது போன்ற கடுமையான விமர்சனங்களை பெற்றிருந்தார்.
காதலர் தினத்தில் கணவர் பெயரை நீக்கிய ரஜினிகாந்த் மகள் – ரசிகர்கள் ஷாக்!
தற்போது ஃபரீனா தனது இன்ஸ்டாவில் செய்த ஒரு ரீல்ஸ் விடீயோவிற்கு ரசிகர் ஒருவர், உங்கள் குழந்தைக்கு இரண்டு மாதம் தானே ஆகிறது நீங்கள் ஓய்வு நேரத்தை உங்கள் குழந்தையுடன் செலவழிக்கலாமே” என்று அவருக்கு கமெண்ட் செய்திருந்தார். ஆனால் அதற்குஃபரீனா “என்னைப் பற்றி நீங்கள் கவலைப்படுவதை நிறுத்துங்கள் அவன் எப்போதுமே என்னுடன் தான் இருக்கிறான்” என்று பதில் அளித்தார். இதற்கு மற்றொரு ரசிகர், ஃபரீனா எப்பொதுமே மோசமாகத்தான் நடந்து கொள்வார். அவருடைய பக்கத்தில் நீங்கள் எதையும் கமெண்ட் செய்து உங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டாம். இவர் உண்மையான வாழ்க்கையிலும் மோசமான பெண்ணாகத்தான் இருப்பார் போல, எப்போதுமே இவர் ரசிகர்களுக்கு ஒழுங்காக பதில் அளித்ததில்லை, கடுமையாகத்தான் நடந்து கொண்டுள்ளார். எனவே நீங்கள் அவரை ப்ளாக் செய்து விட்டு செல்லுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.