விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – பாக்கியாவுடன் இணைந்த அமிர்தா!
பாக்கியலட்சுமி சீரியலில் எழில் காதலிக்கும் அம்ரிதா மற்றும் பாக்கியா இருவரும் சேர்ந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஷூட்டிங் ஸ்பாட்:
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் யாரும் ஆதரவு அளிக்காத நிலையில் 2 வது மகன் எழில் மட்டுமே தனது அம்மாவின் அனைத்து முயற்சிக்கும் உறுதுணையாக இருப்பார். எழில் தான் அம்மாவுக்கு என்ன தேவை என்பதை புரிந்து நடந்து கொள்ளும் அம்மா பையனாக நடித்துள்ளார். மூத்த மகன் செழியன் கூட அம்மாவை பற்றி எந்த கவலையும் இல்லாமல், ஆதரவையும் அளிக்காமல் இருந்து வரும் நிலையில் எழில் இப்படி இருப்பது பாக்கியாவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இருக்கும்.
‘பிக்பாஸ்’ தாமரையை சிங்கபெண்ணாக கொண்டாடிய ஊர் மக்கள் – வைரல் வீடியோ!
பாக்கியாவின் கேட்டரிங் தொழில் தொடங்க அணைத்து உதவிகளையும் செய்ததோடு அதனை விளம்பரப்படுத்தும் எண்ணமும் எழில் உடையது தான். இதனால் சினிமா பிரபலங்கள் இருவரை கூடி வந்து அவர்களின் கேட்டரிங் தொழிலை தொடங்கி வைத்தார். எழில் அம்ரிதா என்ற ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். அம்ரிதாவிற்கு முன்னதாக திருமணம் நடந்து, ஒரு பெண் குழந்தை உள்ளது. அதன்பிறகு அவரது கணவர் விபத்தில் இறந்து விடுகிறார்.
குக் வித் கோமாளியில் வரும் ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி – கலாய்க்கும் நெட்டிசன்கள்! இயக்குனர் ரியாக்ஷன்!
இதனால் எழில் அம்ரிதாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார். இதனை அம்ரிதாவின் அப்பா, அம்மாவிடமும் நேரடியாக கூறி விடுகிறார். ஆனால் அவர்கள் கோவப்படாமல் நடப்பது நடக்கட்டும் என்று விடுகின்றனர். அம்ரிதா இதே போல் பாக்கியாவிற்கும் முன்னரே பழக்கம் உள்ளது. இதனால் குடும்பத்துடன் பாக்கியா அம்ரிதாவிடம் பழகுகிறார்கள். தற்போது பாக்கியாவும், அம்ரிதாவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் இவர்கள் எழில் மற்றும் அம்ரிதா இடையில் திருமண ஏற்பாடு செய்யவும் வாய்ப்புகள் இருக்கிறது. இது தொடர்பான திருப்பங்கள் அடுத்து எதிர்பார்க்கப்படுகிறது.