‘பிக்பாஸ்’ தாமரையை சிங்கபெண்ணாக கொண்டாடிய ஊர் மக்கள் – வைரல் வீடியோ!
பிக் பாஸ் சீசன் 5 முடிந்து அதன் போட்டியாளர்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் தாமரை செல்வி தனது சொந்த ஊருக்கு சென்றபோது அளித்த வரவேற்ப்பு தற்போது வைரலாக பரவி வருகிறது.
தாமரை செல்வி:
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் மக்கள் மத்தியில் நேரடியாக அதிக புகழையும், பிரபலத்தையும் அடைய முடியும் என்பதை உணர்ந்த காரணத்தால் தான் பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இதனை உலக நாயகன் கமல் அவர்களே கூறியுள்ளார். இதற்கு முந்தைய தலைமுறைக்கு தன்னை கமலாக தெரியும் என்றால், தற்போதைய சிறு குழந்தைகள் வரை தன்னை பிக் பாஸ் ஆக அடையாளப் படுத்தியிருக்கும் இந்த நிகழ்ச்சி தனக்கு மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கதிர் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
இதனால் தான் தனக்கு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த போதிலும், சிகிச்சைக்கு நடுவே வீடியோ மூலம் ரசிகர்களிடம் பேசினார். இந்த வாய்ப்பை அனைவரும் நன்றாக பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம் என்றும் கூறினார். கமலின் வாக்கினை உண்மையாகும் விதமாக பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளராக கலந்து கொண்ட தாமரை செல்வி தனது வாய்ப்பை மிகவும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இதனால் நிகழ்ச்சியின் 98 நாட்கள் வரை இருந்தார்.
சன் டிவி ‘ரோஜா’ சீரியல் நடிகை ஷாம்லி தனது குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் தாமரை தற்போது பிரபலமாகி விட்டார். இதனால் பல பெண்களது ஆதரவு தாமரைக்கு இருந்தது. தற்போது தாமரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது ஊருக்கு திரும்பியுள்ள நிலையில், அவரை அவரது ஊர் மக்கள் அனைவரும் சிறப்பாக வரவேற்றுள்ளனர். தாமரை செல்விக்கு சிங்கப்பெண் என்ற அடைமொழியை கொடுத்து வரவேற்றுள்ளனர். இதனால் தாமரையின் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.