யார் இந்த ‘பாக்கியலட்சுமி’ சுசித்ரா? அவரை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியா என்ற லீட் ரோலில் நடித்து வரும் நடிகை சுசித்ராவின் சினிமா வாழ்க்கை, சின்னத்திரை பயணம் குறித்த சில ஸ்வாரசியமான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் நிலையில் இது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.
பாக்கியலட்சுமி சுசித்ரா
தமிழ் சீரியல்களில் மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஹிட் தொடரான ‘பாக்கியலட்சுமி’ இல் பாக்கியா என்ற இல்லத்தரசியாக நடித்து ஏகப்பட்ட அன்புக்கு பாத்திரமாக மாறி இருப்பவர் நடிகை சுசித்ரா. இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் குடும்பத்தின் மீது அன்பை பொழியும் அம்மாவாக, சிறந்த மருமகளாக, சுய தொழில் செய்பவராக அதே நேரத்தில் கணவனின் நடத்தையில் சந்தேகம் கொள்ளாத அப்பாவி மனைவியாக பாக்கியலட்சுமி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் பிரபல கன்னட சீரியல் நடிகை சுசித்ரா.
உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்காத நடிகர் ரஜினிகாந்த் – என்ன காரணம் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
கடந்த 1984ம் ஆண்டு பெங்களூருவில் பிறந்த நடிகை சுசித்ரா வளர்ந்தது, படித்தது எல்லாமே அங்கு தான். அந்த வகையில் பெங்களூருவில் உள்ள நேஷனல் ஸ்கூல் மற்றும் நேஷனல் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவர் 1998ம் ஆண்டு கன்னட சினிமாவில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் சுசித்ரா கடந்த 10 வருடங்களாக சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார்.
இவரது நடிப்பில் உருவான ஒன் மேன் ஆர்மி, மஞ்சுநாதா, காட் பாதர், பீமா, எலக்ஷன் போன்ற கன்னட திரைப்படங்கள் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்களை உருவாக்கித் தந்தது. தொடர்ந்து சீரியல் பக்கம் களமிறங்கிய சுசித்ரா, கன்னட மொழியில் தயாரிக்கப்பட்ட மாங்கல்யா, காவ்யாஞ்சலி, ஈஸ்வரி போன்ற 10க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். அதே போல தெலுங்கிலும் நாகம்மா, அபரிஜிதா, சாந்தி, பந்தம், மௌனராகம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்களிலும் லீட் ரோலில் இவர் நடித்திருக்கிறார்.
பிறந்தநாள் விழாவில் கண்ணம்மா சொல்லப்போகும் உண்மை என்ன? பாரதி வருவாரா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
தொடர்ந்து தமிழில் இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான ‘சைவம்’ திரைப்படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமான நடிகை சுசித்ரா, முதன் முதலாக கலைஞர் டிவியின் ‘நாணல்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் தடம் பதித்தார். பிறகு ஒரு சிறிய இடைவேளைக்கு பின்பு மீண்டும் விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் களமிறங்கி இருக்கும் 36 வயதான நடிகை சுசித்ரா தமிழக மக்களின் பேவரைட் ஆன அம்மாவாக, சிறந்த மாமியாராக கொண்டாடப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.