கோபிக்கு எதிராக மாறும் பாக்கியா – சீரியலில் இனி வரும் எபிசோடுகள்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியாவிற்கு ஆதரவாக ஈஸ்வரி மாறி வரும் நிலையில், கோபி பாக்கியாவை நடத்தும் விதம் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இந்நிலையில் அடுத்து வரப் போகும் எபிசோடுகளில் கோபியை பாக்கியா எதிர்ப்பது போல காட்டப்பட வேண்டும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பல நிகழ்வுகள் இந்த வாரம் முழுவதும் காட்டப்பட்டு வருகிறது. முதலில் கோபிக்கு பாக்கியாவை பிடிக்காமல் இருந்தாலும் வேறு வழி இல்லாமல் அவருடன் வாழ்ந்து வந்தார். ஆனால் தற்போது அவர் விவாகரத்து ஏற்பாடு செய்துள்ளதால் பாக்கியாவை அடியோடு வெறுக்கிறார். அதனால் பாக்கியாவின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறதும், இருந்தாலும் முதலில் ஈஸ்வரி, இனியா, செழியன் என அனைவரும் பாக்கியாவிற்கு எதிராக இருந்தார்கள்.
ஆனால் தற்போது ஈஸ்வரி பாக்கியாவிற்கு ஆதரவாக மாறி இருக்கிறார். மேலும் இனியாவும் அவ்வப்போது பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்கிறார். ஆனால் செழியன் இன்னும் அம்மாவை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கிறார். அதனால் தான் ஜெனிக்கும் செழியனுக்கும் இடையே அடிக்கடி சண்டை வருகிறது. இந்நிலையில் இனி வரும் எபிசோடுகளில் கோபி திருந்தப் போவதில்லை. பாக்கியாவை பல வழிகளில் ஏமாற்ற போகிறார். செல்வி சொல்வது எல்லாம் உண்மை என்று பாக்கியா நினைக்கும் நிலைமை வர போகிறது.
மீண்டும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ரோஷினி – உற்சாகமடைந்த ரசிகர்கள்!
இருந்தாலும் செழியனின் விவாகரத்து பற்றி தெரிந்த பாக்கியா கோவப்பட்டு அடித்த நிலையில் கோபி அதை பார்த்து பயத்தில் இருக்கிறார். அதனால் கோபி இனி சற்று பொறுமையாக இருப்பார் என தெரிய வருகிறது. பாக்கியாவை இவ்வளவு அப்பாவியாக காட்டாமல் அடிக்கடி கோபியை எதிர்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் ராதிகாவுக்கு உண்மை தெரிய வர பாக்கியா ராதிகாவிடம் கெஞ்சுவது போல இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. மறுபக்கம் அமிர்தா கொஞ்சம் கொஞ்சமாக எழிலை புரிந்து கொள்கிறார். அதனால் இருவரும் விரைவில் இணைந்து விடுவது போல கதை கொண்டு செல்லப்பட இருக்கிறது.