குடும்பத்தில் அனைவர் முன்னிலையிலும் உண்மையை சொன்ன “பாக்கியா” – அதிரடியாக வெளியான சீரியல் ப்ரோமோ!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவிற்கு கோபியின் உண்மையாக முகம் தெரிந்ததை அடுத்து அவர் குடும்பத்திற்கு எல்லா உண்மையையும் சொல்ல இருக்கிறார். இது குறித்து அதிரடியான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் உண்மை எல்லாம் வெளியே வரும் தருணம் வந்துள்ளது. மருத்துவமனையில் கோபிக்கு அடிபட்டு இருக்க ராதிகா வந்து மனைவி என சொல்லி எல்லா வேலைகளையும் செய்கிறார். அப்போது மருத்துவமனைக்கு வந்த பாக்கியாவிடம் நர்ஸ் கோபியின் மனைவி பில் கட்டியதாக சொல்ல உடனே பாக்கியாவிற்கு சந்தேகம் வருகிறது. அதனால் கோபி ரூமிற்கு சென்று பார்க்க அங்கே ஒரு பெண்ணின் கையை பிடித்துக் கொண்டு கோபி இருப்பதை பார்த்து பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.
Exams Daily Mobile App Download
பின் வெளியே நர்ஸ் கோபியின் மனைவியை கூப்பிட ராதிகா சொல்லுங்கள் என சொல்லி உள்ளே செல்கிறார். அதை பார்த்து பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். அவரால் அதிர்ச்சியை தாங்கி கொள்ள முடியாமல் மயக்கம் போட்டு விழுகிறார். கோபி தன்னை பிடிக்கவில்லை என சொன்னது பற்றியும், ராதிகா தன்னை திருமணம் செய்ய இருப்பவர் பற்றியும் சொல்லிய அனைத்தையும் நினைத்துக் கொண்டே வந்து இரவு முழுவதும் அதை நினைத்து கொண்டே இருக்கிறார். அப்போது கோபி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வருகிறார்.
அவர் உள்ளே வந்ததும் பாக்கியா மருத்துவமனையில் இருந்து வந்தது கூட தெரியாமல் கோபி இருக்க, உடனே பாக்கியா நான் உங்களுக்கு மருத்துவமனையில் பில் காட்டினேனா என கேட்கிறார். செழியன் கோபியின் மனைவி கட்டியதாக சொன்னார்கள் என சொல்ல, அப்படி தான் சொன்னார்கள் ஆனால் கோபியின் மனைவி பாக்கியலட்சுமி கட்டியதாக சொன்னார்களா என கேட்கிறார். ஈஸ்வரி கோபி மனைவி வேறு பாக்கியலட்சுமி வேறா என கேட்க, மருத்துவமனையில் கோபி மனைவி என பில் கட்டியது, இவர் கையை பிடித்து கொண்டு பேசியது எல்லாம் ராதிகா என அனைவரும் முன்னாடியும் உண்மையை சொல்கிறார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்