மீண்டும் பொய் சொல்லி தப்பித்த ரோஹித், ஜானகி அம்மா உடல்நிலை பற்றி கவலைப்படும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

0
மீண்டும் பொய் சொல்லி தப்பித்த ரோஹித், ஜானகி அம்மா உடல்நிலை பற்றி கவலைப்படும் கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
மீண்டும் பொய் சொல்லி தப்பித்த ரோஹித், ஜானகி அம்மா உடல்நிலை பற்றி கவலைப்படும் கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
மீண்டும் பொய் சொல்லி தப்பித்த ரோஹித், ஜானகி அம்மா உடல்நிலை பற்றி கவலைப்படும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ரோஹித் காரை எடுத்துக் கொண்டு வெண்பா வர அவர் பின்னாடியே வந்து பணத்தை கொடுத்து பிரச்சனையை சரி செய்கிறார். மறுபக்கம் ஜானகி அம்மா உடல்நிலை பற்றி கண்ணம்மா பாரதியிடம் பேசுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பா ரோஹித் காரை எடுத்துக் கொண்டு வர அப்போது கார் ஓனரிடம் வேலை பார்க்கும் ஒருவர் வந்து வெண்பாவிடம் பிரச்சனை செய்கிறார். அப்போது வெண்பா நான் போலீசிடம் பேசுகிறேன் என சொல்ல போன் செய் அப்போது தான் நீ யாரிடம் இருந்து இந்த காரை திருடி கொண்டு வந்தாய் என தெரிய வரும் என சொல்கிறார். வெண்பாவிற்கு சந்தேகம் வர அப்போது சரியாக ரோஹித் வருகிறார்.

ரோஹித் வந்து அந்த ஆளிடம் மாணிக்கம் நீ என்னிடம் தான வேலை செய்கிறாய் என சொல்லி பணத்தை காட்ட ஆமாம் என அவரும் சொல்கிறார் அதனால் வெண்பாவிற்கு ஒன்றும் புரியாமல் இருக்கிறது. ரோஹித் தப்பித்துவிட்டோம் என நிம்மதியாக இருக்கிறார். மறுபக்கம் கண்ணம்மா பாரதியை பார்க்க வருகிறார். அவர் பாரதியிடம் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என சொல்ல சொல்லு என பாரதி சொல்கிறார். ஜானகி அம்மா உடல்நிலை பற்றி எனக்கு சில சந்தேகம் இருக்கிறது என கண்ணம்மா சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

என்ன விஷயம் என கேட்க நான் இப்போது தான் மருத்துவமனையில் வேலை செய்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக கத்துக்கொண்டிருக்கிறேன். அதனால் எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. ஜானகி அம்மாவிற்கு ஆப்ரேசன் செய்தால் 10 சதவிகிதம் தான் வாய்ப்பு என தெரிந்தும் ஏன் அதை செய்ய வேண்டும். இருவரும் மிகவும் பாசமாக இருக்கிறார்கள். ஆப்ரேசன் செய்து அது முடியாமல் போனால் அவர்கள் ஆப்ரேசன் இல்லாமல் 4 5 மாதங்கள் அவருடன் சந்தோசமாக இருப்பார் என சொல்கிறார்.

அப்போது பாரதி வெளி ஆளாக இருந்தால் இப்படி தான் யோசிக்க தோன்றும் ஆனால் ஒரு டாக்டராக நான் பல கேஸ் பார்த்திருக்கேன். நான் படித்து முடித்த போது கூட இதே போல ஒரு கேஸ் பார்த்தேன் அவர் இப்போது நன்றாக இருக்கிறார் என சொல்ல ஒரு டாக்டராக இந்த ஆப்ரேசன் நல்லபடியாக என்னால் செய்ய முடியும் என சொல்கிறார். அதை கேட்டதும் கண்ணம்மாவிற்கு நிம்மதியாக இருக்கிறது. பின் லட்சுமி ஹேமா ஜானகி பாட்டி நன்றாக கதை சொல்வதாக பேசிக் கொண்டு வருகிறார்.

TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – இப்படி படித்தால் வெற்றி உறுதி!

லட்சுமி அப்போது ஹேமாவின் அம்மா பற்றி கேட்க ஆனால் ஹேமா எனக்கு இன்னும் தெரியவில்லை டாடி இதை பற்றி பேசினால் கோவப்படுவதாக சொல்கிறார். பின் லட்சுமி அந்த அட்வாக்ட் நம்பருக்கு போன் செய்து பேசி உன் அம்மா பற்றி தெரிந்து கொள் என சொல்கிறாள் ஹேமா நல்ல ஐடியா என சொல்கிறாள். பின் லட்சுமி நானும் உன் அம்மாவை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பதாக சொல்கிறார். மறுபக்கம் ஜானகி அம்மாவும் ராமன் சாரும் எதுவும் பேசாமல் கோவமாக இருக்கின்றனர்.

அப்போது நர்ஸ் வந்து பார்த்து இவர்கள் இப்படி இருக்கமாட்டார்களே என நினைக்கிறார். பின் மீண்டும் வந்து பார்க்க இருவரையும் காணவில்லை. நர்ஸ் எல்லா இடங்களிலும் தேடி அலைகிறார். பின் கண்ணம்மாவிடம் வந்து சொல்ல அவர்கள் வெளியே வாக்கிங் போக வேண்டும் என சொன்னதாக சொல்கிறார். நர்ஸ் நான் அங்கே பார்த்துவிட்டேன் என சொல்ல, அப்போது ஜானகி அம்மாவிற்கு டெஸ்ட் எடுக்க வேண்டும் என பாரதி அவர்களை வர சொல்கிறார். அப்போது ஒரு நர்ஸ் சென்று ஜானகி அம்மா ராமன் ஐயாவை காணவில்லை என சொல்ல பாரதி கண்ணம்மாவை சத்தம் போடுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!