அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்டு கோபியை கண்டிக்கும் பாக்கியா – கோபி திருந்துவாரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
தான் காவல் நிலையத்தில் இருக்கும் போது கூட கோபி தனக்குத் துணையாக நிற்கவில்லை என கோபி மீது பாக்கியா பயங்கரமான கோவத்தில் இருக்கிறார். இதனால் கோபி வீட்டிற்கு வந்ததும் கோபியை பார்த்து திட்டும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
கோபி திருந்துவாரா
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. எப்போதுதான் கோபி ராதிகாவை தான் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்கிற விஷயம் பாக்கியாவிற்கு தெரிய வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். எவ்வளவு சீக்கிரம் பாக்கியா விவாகரத்து செய்ய முடியுமோ விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோபி செய்து கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
ஆனால் ராதிகா பாக்கியாவை அடிக்கடி சந்தித்துக் கொண்டே இருப்பதால் உண்மைகள் ராதிகாவுக்கு தெரியவந்துவிடுமோ என்கிற பயம் கோபிக்கு இருக்கிறது. இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும் என எண்ணி கோபி திட்டம் போடுகிறார். அதாவது ராதிகா மயூவின் பிறந்தநாளுக்காக நூறு ஆதரவற்ற குழந்தைகளுக்கு சமைக்கச் சொல்லி பாக்கியாவிடம் ஆர்டர் கொடுத்திருப்பார். அப்போது பாக்கியா சமைத்த சாப்பாட்டில் ஏதோ ஒன்றை கலந்து விடுகிறார் கோபி. அந்த உணவை சாப்பிட்ட அனைத்து குழந்தைகளுமே மயங்கியதால் பாக்கியாவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து இருக்கின்றனர்.
ராதிகா மீதும் தவறு இருக்குமோ என எண்ணி ராதிகா விசாரிக்க வேண்டும் என போலீசார் ராதிகாவையும் காவல்நிலையத்திற்கு அழைத்து வருகிறார்கள். பாக்கியாவை நம்பியதற்கு தனக்கு கிடைத்த தண்டனை என ராதிகா பாக்கியாவின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். தான் நினைத்ததை சாதித்து விட்டோம் என கோபியும் மகிழ்ச்சியில் இருக்கிறார். பின்பு ராதிகாவை மட்டும் காவல் நிலையத்தில் இருந்து காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வருகிறார். பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபித்து பாக்கியாவை விடுதலை செய்து எழில் வீட்டிற்கு கூட்டி வருகிறார். பின்பு எதுவுமே நடக்காதது போல பாக்கியாவின் வீட்டிற்கு வருகிறார். அப்போது நீங்கள் செய்ததெல்லாம் சரிதானா என கோபியை பாக்கியா கோபத்தில் திட்டும் படியும், அனைத்து உண்மைகளும் தெரிந்து விட்டதோ என கோபி பயப்படும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.