தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நாளை முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நடைபெற உள்ள செய்முறை தேர்வு குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அது குறித்த முக்கிய தொகுப்பை கீழே பார்ப்போம்.

11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள்:

தமிழ் நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு பல சிக்கல்களை சந்தித்து தவித்து வந்தது. மேலும் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி போன்ற துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத நாட்களாக மாணவர்களின் கல்வி சீரழிந்து விட்டது என்றே கூறலாம். மேலும் இந்த கொரோனாவின் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் இருந்த போது பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. இந்த வகையில் மாணவர்கள் பாடத்தை கற்றாலும் பள்ளிக்கு சென்று அங்கு இருக்கும் சூழலில் பாடம் கற்பது மிகவும் சிறந்ததாக இருந்து வந்தது. இதனை இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இழந்து வந்தனர். இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10,11, 12 வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்தாக வரவுள்ள பொதுத் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு – முதல்வர் நாளை ஆலோசனை!

அதன்படி, தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 23ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், ஜூன் 17 வெளியிடப்படும். பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை http://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான கால அட்டவணை ஒன்றை தயாரித்து அதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நாளை முதல் ஆரம்பிக்க உள்ள செய்முறை தேர்வுகள் குறித்து தமிழக அரசு தேர்வுத் துறை அறிவித்து உள்ளது. அது என்னவென்றால், இந்த கல்வியாண்டில் செய்முறை தேர்வுக்கான நேரத்தை 3 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரமாக குறைத்து அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வுகள், 30 மதிப்பெண்களுக்கு நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர். இதில் 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே மாணவர்கள் செய்முறை பங்கேற்பார்கள். 10 மதிப்பெண்கள் அகமதிப்பீடு ஆக வழங்கப்படுகின்றன. எனவே 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே மாணவர்கள் செய்முறை தேர்வு என்பதால் அதை 2 மணி நேரமாக குறைத்து அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!