திருமணத்தை நிறுத்த வந்த ராமமூர்த்தி.. வேலை முக்கியம் என சொல்லும் பாக்கியா – ப்ரோமோ ரிலீஸ்!

0
திருமணத்தை நிறுத்த வந்த ராமமூர்த்தி.. வேலை முக்கியம் என சொல்லும் பாக்கியா - ப்ரோமோ ரிலீஸ்!
திருமணத்தை நிறுத்த வந்த ராமமூர்த்தி.. வேலை முக்கியம் என சொல்லும் பாக்கியா - ப்ரோமோ ரிலீஸ்!
திருமணத்தை நிறுத்த வந்த ராமமூர்த்தி.. வேலை முக்கியம் என சொல்லும் பாக்கியா – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவின் ரிசப்ஷன் நடந்து கொண்டிருக்க, ராமமூர்த்தி மண்டபத்தை தேடி வந்து திருமணத்தை நிறுத்த முயற்சிக்கிறார். இது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் பல விறுவிறுப்பான காட்சிகளுடன் கதை சென்று கொண்டிருக்கிறது. கோபி ராதிகாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, திருமண மேடை வரை வந்துவிட்டனர். சொந்தங்கள் சூழ அவர்களின் ரிசப்ஷன் நடக்கிறது. அதில் பாக்கியா தான் சமையல் செய்கிறார். மணமக்களை பார்க்காமல் தன்னுடைய வேலையை பாக்கியா சரியாக செய்கிறார். இதற்கிடையே ராமமூர்த்தி திருமணத்தை நிறுத்த ராதிகா வீட்டிற்கு செல்கிறார்.

ஆனால் எங்கே வீடு பூட்டி இருக்க, பக்கத்தில் இருப்பவர் ராதிகாவுக்கு திருமணம் என சொல்கிறார். அதனால் எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என நினைத்து ராமமூர்த்தி ஆட்டோவில் மண்டபத்தை தேடி செல்கிறார். இந்நிலையில் திருமண மண்டபத்தில் பாக்கியா மயூராவை பார்க்க, இது கோபி ராதிகாவின் திருமணம் என்ற உண்மை தெரிய வருகிறது. தற்போது இது குறித்து வெளியான ப்ரோமோவில், ராமமூர்த்தி மண்டபத்தை கண்டுபிடித்து திருமணத்தை நிறுத்த வருகிறார்.

மண்டபம் வாசலில் நின்று ஏய்.. என ராமமூர்த்தி சத்தம் போட, கோபி மாலையும் கழுத்துமாக மேடையை விட்டு இறங்கி வருகிறார். அவரிடம் ராமமூர்த்தி காலம் போன காலத்தில் கல்யாண கோலத்தில் வந்து நிற்கிறாய், உனக்கு வெட்கமாக இல்லையா என கேட்கிறார். அதற்கு கோபி இல்லை என சத்தம் போடுகிறார். இப்படி எல்லாரையும் அழ வைத்துவிட்டு நீ எப்படி சந்தோசமாக இருப்பாய் என கோபி மாலையை பிடித்து ராமமூர்த்தி கேட்க, கோபி வெளியே போயா என தள்ளி விடுகிறார்.

பாக்கியாவை மண்டபத்தில் இருந்து விரட்டியடிக்க சதி திட்டம் தீட்டும் கோபி – துணை போகும் ராதிகா!

Exams Daily Mobile App Download

உடனே பாக்கியா அவரை தாங்கி பிடிக்கிறார். பாக்கியா நீங்க ஏன் இங்கே வந்தீங்க என கேட்க, கோபி போ வெளியே என சொல்கிறார். பாக்கியா போதும் என சொல்லிவிட்டு ராமமூர்த்தியை அழைத்து கொண்டு சமையல் செய்யும் இடத்திற்கு வருகிறார். பாக்கியா ராமமூர்த்தியை போக சொல்லிவிட்டு, இந்த வேலை எனக்கு மிகவும் முக்கியம் என சொல்கிறார். என்னுடைய ஒரே நம்பிக்கை இதான், எதற்காகவும் என் வேலையை விட முடியாது என சொல்கிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!