பாக்கியாவை மண்டபத்தில் இருந்து விரட்டியடிக்க சதி திட்டம் தீட்டும் கோபி – துணை போகும் ராதிகா!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா கோபியின் ரிசெப்ஷன் ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து கொண்டிருக்க, பாக்கியா மணமக்கள் யார் என தெரியாமல் பொறுப்பாக சமைத்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சாப்பாடு நன்றாக இருப்பதாக வந்தவர்கள் சொல்ல, ராதிகாவுக்கு பாக்கியா நியாபகம் வருகிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கோபியும் ராதிகாவும் இதற்கு மேல் வீட்டில் இருந்தால் பிரச்சனை வரும் என வேகமாக கிளம்பி மண்டபத்திற்கு வருகின்றனர். அங்கே ஏற்கனவே பாக்கியா, செல்வி மற்றும் சமையல் செய்யும் பெண்களுடன் வந்து சமையல் செய்ய தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் மண்டபத்தில் பாக்கியா மணமக்களை பார்க்காமல் தன்னுடைய வேலைகளை மட்டும் செய்து கொண்டிருக்கிறார்.
கோபியும் ராதிகாவும் மணமக்களாக அலங்காரம் செய்து மேடையில் இருக்க, வரிசையாக சொந்தக்காரர்கள் வந்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கல்யாண மண்டபத்தில் மயூவை பாக்கியா பார்த்துவிடுகிறார். இது என்னுடைய அம்மா திருமணம் என மயூ சொல்ல, பாக்கியாவிற்கு உண்மை எல்லாம் தெரிய வருகிறது. ஆனாலும் பாக்கியா தன்னுடைய வேலை தான் முக்கியம் என சொல்லி சமையலை தொடர்ந்து செய்கிறார்.
TN TRB PG பணி நியமனம் தாமதம்? தேர்வர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கை!
Exams Daily Mobile App Download
இதற்கிடையே மண்டபத்தில் வந்தவர்கள் எல்லாரும் சாப்பாடு அருமையாக இருந்ததாக சந்துருவிடம் சொல்கின்றனர். ராதிகா யார் சமைத்தார் என கேட்க, எதோ பெண் காண்ட்ராக்டர் என சந்துரு சொல்கிறார். அப்போது ராதிகாவுக்கு பாக்கியாவின் நியாபகம் வருகிறது. டீச்சரும் இப்படி தான் சமைப்பாங்க என ராதிகா சொல்ல, ராதிகாவின் அம்மா இந்த நேரத்தில் இது பற்றி பேச வேண்டாம் என சொல்கிறார். பின் சந்துரு சமையல் செய்தவரை கூப்பிட, ராதிகா மற்றும் கோபிக்கு உண்மை தெரிய வருகிறது. பாக்கியாவை எப்படியாவது மண்டபத்தை விட்டு விரட்ட வேண்டும் என கோபி திட்டமிட அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்