ஜெனி அப்பாவிடம் சண்டை போடும் ஈஸ்வரி, செழியனுக்கு ஆறுதல் சொன்ன கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ஈஸ்வரி ஜெனியின் அப்பாவிற்கு போன் செய்து திட்டுகிறார். உடனே கோபி ஜெனி வீட்டிற்கு கிளம்ப, ஈஸ்வரி போகவிடாமல் தடுக்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், செழியன் சோகமாக இருக்க ஈஸ்வரி ஜெனி அப்பாவிற்கு போன் செய்து தர சொல்கிறார். உடனே ஈஸ்வரி ஜெனி அப்பாவிடம் மகள் வாழ வேண்டும் என திருமணம் செய்து கொடுத்தீர்களா இல்லை பேருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு உங்க வீட்டில் வைத்துக் கொள்ள நினைத்தீர்களா என கேட்கிறார். எல்லா அப்பாவும் வாழ வேண்டும் என்று நினைக்க, தான் செய்வாங்க என சொல்ல, பார்த்தால் அப்படி தெரியவில்லை என ஈஸ்வரி சொல்கிறார்.
இந்த கல்யாணத்திற்காக எவ்வளவு பொறுமையாக இருக்கிறோம் ஆனால் நீங்க ஒரு பொண்ணை வைத்துக் கொண்டு அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. அவளை திருமணம் செய்து கொடுப்பது போல கொடுத்து உங்க வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டிர்கள். இனிமேல் என்ன செய்தாலும் உங்க பொண்ணு இங்கே வந்து வாழ மாட்டாள் என சொல்ல, குடும்பத்துடன் வந்து கெஞ்சினாலும் என் பொண்ணை அனுப்பமாட்டேன் என ஜெனி அப்பா சொல்கிறார்.
பின் ஜோசப் ஜெனியிடம் எவ்வளவு திமிராக இருக்கிறார் என சொல்ல, எல்லாம் ஜெனிக்காக தான் இனிமேல் அவள் அங்கே தான் வாழ வேண்டும் என சொல்ல, அதெல்லாம் இனி நடக்கும் என நம்பிக்கை இல்லை. அவங்க அப்படி பேசியதை கேட்டிருந்தால் உனக்கு புரிந்திருக்கும் என சொல்ல, மரியம் செழியன் அப்படி இல்லை என நினைக்கிறேன் என சொல்ல, செழியனை எப்படி நீ காதலித்தாய் என ஜோசப் கேட்கிறார். இத்தனை நாளாக அப்படி எதுவும் நடக்கவில்லை என ஜெனி சொல்கிறார்.
நீ பிடிவாதமாக இருந்ததால் தான் உன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது. இல்லை என்றால் ஒரு நல்ல பையனை பார்த்து திருமணம் செய்து வைத்திருப்பேன் என சொல்ல ஜெனி அழுது கொண்டே செல்கிறார். பாக்கியா கோபியிடம் வந்து நடந்ததை சொல்ல, கோபி இப்படி நடந்துவிட்டதா என அதிர்ச்சி அடைகிறார். செழியன் ஏன் இப்படி இருக்கிறான். அவனுக்கு பிரச்சனை என்றால் நம்மிடம் வந்து பேசியிருக்கலாம் என சொல்கிறார். பாக்கியா இப்பவே ஜெனி வீட்டிற்கு போவோம் என சொல்லி கிளம்புகின்றனர்.
ஈஸ்வரியிடம் வந்து கோபி கேட்க, நான் பொறுமையாக தான் பேசினேன் ஆனால் அவர் கண்டபடி என்னை பேசி விட்டார் என ஈஸ்வரி சொல்கிறார். என்னை இப்படி பேசி இருக்கார் ஆனால் அதை பற்றி கவலை இல்லாமல் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என கேட்கிறார். நீங்க ஜெனி வீட்டிற்கு போனால் நான் இந்த வீட்டில் இருக்கமாட்டேன் என சொல்ல, கோபி ஜெனி வீட்டிற்கு போக வேண்டாம் என சொல்கிறார். எழில் வந்து செழியனிடம் நீ செய்தது தப்பு என சொல்ல, கோபி வந்து பேசுகிறார்.
கோபி செழியனிடம் வந்து நீ செய்தது தப்பு தான் நீ ஜெனியிடம் பேசியது தப்பு தான், ஒரு பொண்ணுடைய மனம் மாற கொஞ்சம் நேரம் கொடு, அவள் உன்னை விட்டு போய்விடுவாள் என நினைத்தது நீ வருத்தப்படுவது சரி தான் ஆனால் உங்க திருமணம் செய்ய ஜெனி செய்தது எல்லாம் மறைந்துட்டியா என கேட்டு சமாதானம் செய்கிறார். உடனே செழியனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.