சௌந்தர்யாவிடம் சிக்கிக் கொண்ட பாக்கியா, அப்பா பாசத்திற்கு ஏங்கும் லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாக்கியா கண்ணம்மா வீட்டிற்கு போயிட்டு வரும் போது வழியில் சௌந்தர்யா வருகிறார். பின் கண்ணம்மா சாப்பாடு கொண்டு செல்ல லட்சுமி அப்பா பாசத்திற்கு ஏங்குகிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாக்கியலட்சுமி கண்ணம்மா வீட்டில் பேசிவிட்டு வந்து கொண்டிருக்கும் போது சௌந்தர்யா அந்த பக்கம் வருகிறார் என நினைக்கிறார். உடனே காரை நிறுத்தி என்ன இந்த பக்கம் என கேட்க, சொந்தக்கரவங்க வீட்டிற்கு வந்தேன் என பொய் சொல்கிறார். பின் உண்மையை சொல்லுங்க என கேட்க பாக்கியா பயத்தில் இருக்கிறார். பின் கையில் வைத்திருக்கும் சாப்பாடை வாங்கி பார்க்க அது கண்ணம்மா வைத்த குழம்பு போல இருக்கிறது.
உண்மையை சொல்லு எங்கே போன என சௌந்தர்யா மீண்டும் கேட்க, கண்ணம்மா வீட்டிற்கு தான் என பாக்கியா சொல்கிறார். எதற்கு என கேட்க சும்மா தான் என பாக்கியா சொல்கிறார். பின் கண்ணம்மாவிடம் பணம் கேட்க சென்றேன் என பாக்கியா சொல்ல, அவளிடம் பணம் இருக்கிறதா என சௌந்தர்யா கேட்கிறார். கண்ணம்மாவை விவாகரத்து செய்தால் எனக்கு 1 கோடி தருவதாக டாக்டர் தம்பி சொன்னாங்க அதான் என அஞ்சலி அம்மா சொல்ல, எந்த டாக்டர் என சௌந்தர்யா கேட்கிறார்.
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 3) பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!
உங்க புள்ள தான் என சொல்ல சௌந்தர்யா அதிர்ச்சி அடைகிறார். உனக்கு பணம் வேண்டும் என்றால் என்னிடம் கேட்டிருக்கலாம் அதற்காக ஒரு பெண்ணுடைய வாழ்க்கையை கெடுப்பாயா. அதுவும் அவள் உனக்கு மகள் முறை தான என சௌந்தர்யா கேட்கிறார். மறுபக்கம் ஹேமாவிற்கு பாரதி சாப்பாடு ஊட்டிவிட ஹேமா சமையல் அம்மா எப்போது வருவாங்க என கேட்கிறார். ஆனால் பாரதி எதற்கு என கேட்க, சமையல் அம்மா எதாவது செய்து கொண்டு வந்திருப்பாங்க எனக்கு கொடுப்பார்கள் என சொல்கிறாள்.
அந்த பக்கம் சமையல் அம்மா செய்த சாப்பாடு நன்றாக இருந்தது என டீச்சர் பேசிக் கொண்டு செல்ல, சமையல் அம்மா சிக்கன் செய்திருக்காங்க நன்றாக இருக்கும் என ஹேமா சந்தோஷத்தில் இருக்க, அங்கே கண்ணம்மா வருகிறார். பாரதிக்கும் ஹேமாவிற்கும் சிக்கன் கொடுக்கிறார். பின் லக்ஷ்மிக்கு சாப்பாடு கொடுக்க, ஹேமா பாரதி பாசமாக இருப்பதை பார்த்த லட்சுமி என் அப்பா மட்டும் ஏன் இப்படி செய்யமாற்றங்க அவரை நான் பார்த்தது கூட இல்லை என சொல்லி கண்ணம்மாவிடம் வருத்தப்படுகிறார்.
அண்ணாத்த’ படத்திற்கு நயன்தாரா பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
கண்ணம்மா இன்று இரவு அப்பா பற்றி சொல்கிறேன் என சொல்லி சமாளிக்கிறார். பின் சௌந்தர்யா பாரதி மீது கோவத்தில் வீட்டிற்கு வர என்னாச்சு என வேணு கேட்கிறார். சௌந்தர்யா நடந்ததை சொல்ல, சரி நீ பொறுமையாக இரு இப்போதைக்கு பாரதியிடம் கேட்க வேண்டாம். கண்ணம்மா உறுதியாக இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை என சொல்லி சமாளிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.